உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

155

தருமாறு வேண்டியபடியே அவர் இறைவன்பாற் பெற்ற மற்றுமொரு கனியையுங் கனியையுங் கொணர்ந்து கொணர்ந்து அவன் கையிற் கொடுக்க, அஃது உடனே மறைந்து போயிற்று. அங்ஙனம் மறைந்ததைக் கண்டபின்னும் அவன் அம்மையாரின் தெய்வ மாட்சியினையும், அவர்க்குச் சிவபிரான் அருள்செய்த மாட்சி யினையும் உணர்ந்து காணமாட்டானாய் அவர்பால் மேலும் மேலும் பேரன்பு கொள்ளமாட்டானாய், அவரை ஒரு தெய்வமாகவே கருதி அஞ்சி அவரை அணுகாதிருந்து, பின்னர் அவர்க்குத் தெரிவியாமலே அவரை விட்டு அகன்று வேறோரூருக்குப் போய் வேறொரு மாதினை மணந்து கொண்டான். இவை தம்மை ஆசிரியர் சேக்கிழாரே,

66

.

“வணிகனுந் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் கானான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெய்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும் துணிவுகொண்டு எவர்க்குஞ் சொல்லான் தொடர்வின்றி

எனவும்,

“விடுவதே எண்ணமாக மேவிய முயற்சிசெய்வான்’

எனவும்,

L

ஒழுகு நாளில்”

“சலந்தரு கடவுட் போற்றித் தலைமையாம் நாய்கன் றானும் நலந்தரு நாளி லேறி நளிர்திரைக் கடன்மேற் போனான்

எனவும்,

“கடன்மிசை வங்க மோட்டிக் கருதிய தேயந் தன்னில் அடைவறச் சென்று சேர்ந்து”

எனவும்,

"மெய்ப்புகழ் விளங்கு மவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்”

எனவும் உரைத்தல் காண்க. மேலெடுத்துக்காட்டிய மூன்றாஞ் செய்யுளில் அவன் அம்மையாரைவிட்டுக் கடன்மேற் சென்ற காலையில் வருணனை வணங்கிச் சென்றான் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/180&oldid=1583825" இலிருந்து மீள்விக்கப்பட்டது