உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மறைமலையம் 16

கலையர்க்குக் கடைசியில் ஏராளமான செல்வத்தைக் கொடுத்து அருள்செய்ததும், இளையான்குடிமாறரை வாழ்நாண் முற்றும் வறுமையிலேயே வைத்து அருள்செய்ததும், இன்னும் இவைபோல செய்ததும் என்னை? யென்று அவற்றுக்கெல் லாம் இறைவன் திருவுளக் கருத்தினை ஆராய்ப் புகுந்தால், அது நம்மனோர்க்கு விளங்கற்பாலதன்று. ஆதலால், இதனை யோர் ஏதுவாய்க் கொண்டு அம் மறுப்புரைகாரர் எம்மை ஏளனஞ் செய்யப்புக்கது அவர்க்கே ஏளனமாய் முடிந்தமை காண்க.

14. சுந்தரமூர்த்திகளின் காதற் றிருமணம்

இனிச், சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை L மணந்ததற்குக் காரணம், அவர் தமது முற்பிறவியிற் றிருக்கைலையி லிருந்தஞான்று செய்த குற்றமேயாகுமென அம் மறுப்புரைகாரர், பிற்காலத்தே பொய்யாகப் புனைந்துகட்டிய பெரிய புராணத்தே பார்ப்பனர் சேர்த்துவிட்ட ஒருகதையினை எடுத்துக் காட்டுகின்றார். வேறு தக்க காரணங் காட்டலியலாது ஒரு பொய்க் கதையினைத் தமக்குத் துணையாகக்கொண்ட இவரதுசெயல், நீரிலமிழ்வோன் ஒருவன் பெரிதுந் தத்தளித்துச் சிறியதொரு துரும்பினைத் தனக்குத் துணையாக விரைந்து பற்றியதனையே ஒப்பதாயிருக்கின்றது! இவர் தமது சாதி யிறுமாப்புக் கொள்கைக்கு இத்தகைய பொய்க்காரணமன்றி, வேறெது காட்ட வல்லார்! அதுநிற்க.

இவரெடுத்துக் காட்டிய பொய்க்கதையினைக் கூறுந் 'திருமலைச்சருக்கம்' ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப் படாமற் பிற்காலத்துப் பார்ப்பனரொருவராற் புனைந்து கட்டிய பெரியபுராணத்தின்கட் சேர்க்கப்பட்டதாகும் என்னும் உண்மையினை எமது ஞானசாகரப் பத்துப் பதினோராம் பதும

தழ்களின் புல்லிமேல் வெளிவந்த சேக்கிழாரும் பெரிய புராணம் என்னும் ஆராய்ச்சியுரையில் விரித்து விளக்கி யிருக்கின்றாம். அவ்வளவும் ஈண்டெழுதுதல் வேண்டாமையிற் சில குறிப்புகள் மட்டுமே காட்டுவாம்.

திருக்கைலையிலிருந்த ஆலாலசுந்தரர் இறைவற்குப் பூக்கொய்வான்வேண்டி ஆண்டுள்ள பூங்காவிற் புக்கவழி, அங்கு முன்னரே இறைவிக்கு மலர்வேண்டி வந்திருந்த கமலினி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/183&oldid=1583840" இலிருந்து மீள்விக்கப்பட்டது