உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

  • மறைமலையம் -16

வைத்தனன் அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம், இத்தையும் அறியார் பீட லிங்கத்தின் இயல்பும் ஓரார்”

என்று வலியுறுத்து நுவலுகையில், மணங்கூடாத ஆலால சுந்தரரும் அங்ஙனமே மணங்கூடாக் கன்னியரான அவ்விரு வரும் ஒருவரையொருவர் காதலித்தது குற்றமாமோ? அவா வறுத்த உயிர்கள் சென்று வைகுதற்கிடமான வீட்டுலகு திருக்கைலாயமாகலின், ஆண்டுள்ளார் ஒருவரையொருவர் அவாவுதல் குற்றமன்றோவெனின்; அவா வறுத் வீட்டுலகு சேர்ந்தார்க்கும் ஆண்டு மீள அவா வுண்டாமென்றல் யாங்ஙனம் கூடும்? மேலுங், காதலின்பநுகர்ந்து அவ்வாற்றால் அவா சேர்க்கை, காதலின்பம் நுகர்ந்தொழித்து அவா அவிந்து இறைவன் திருவடியைத் தலைக்கூடினார்க்கும் மீண்டும் உளதாவதாயின், இறைவனைச் சேர்ந்து பெற்றபயன் என்னை? என்று இவ்வாறெல்லாம் நிகழுச் தடைகளால், திருக்கைலையிற் சுந்தரர் காதலித்த கதை வெறும் பொய்யாதல் நன்கு பெறப்படும் என்க.

அதுவேயுமன்றி, இம் ம் மண்ணுலகத்துள்ளார்தஞ் சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத நுண்பெரு மேல்நிலைக் கண்ணதான அராக தத்துவ வுலகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அக் கதையினை, இம் மண்ணுலகத்திருந்த சேக்கிழார் அறிந்த தெவ்வாறு? இந் நிலவுலகத்து நிகழ்ந்த நாயன்மார் வரலாறு இதற்கு எட்டாத் தொலைவில் உள்ள மேலுலகங்களின் நிகழ்ச்சிகளையும் யாண்டேனுங் கூறப்புகுந் தாரல்லர்; நாயன்மார் முற்பிறவி வரலாறுகளையேனும் யாண்டாயினுங் குறிப்பாலேனுங் கூறினரோவெனிற் சிறிதுங் கூறிற்றிலர். அப்பர், சம்பந்தர், கண்ணப்பர், சிறுத்தொண்டர் முதலான எவர்க்கும் முற்பிறவி வரலாறுகள் சொல்லாத சேக்கிழார் சுந்தரர்க்கு மட்டும் அது கூறினாரென்றல் ஒக்குமோ? சம்பந்தரைச் சுப்பிரமணியாவ தாரம் என்றுங், கண்ணப்பரை அருச்சுனையவதாரம் என்றுஞ், சிறுத் தொண்டரைக் கர்ணன் அவதாரம் என்றும் வழங்கும் பொய்க் கதைகளைச் சேக்கிழார் சிறிதேனுந் தழுவினரா? இல்லையே. அவ்வாறிருக்கச் சுந்தரர்தம் முற்பிறவி வரலாறு தெரிப்பதாகக்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/185&oldid=1583850" இலிருந்து மீள்விக்கப்பட்டது