உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

176

❖ LDM MLDMOшLD -16 →

அன்புக்கு மாறான சாதிக்கட்டைத் தொலைத்த பெருஞ் சிறப்புடைய வாகலின், நாமும் அவர் செய்த அச் செயல்கள் போற் செய்து அன்பரோடு அளவளாவுதலாற் போதரும் இழுக்கென்னை? இழுக்கில்லாத விழுமிய அந் நடைகளைத் தமது போலிப் புல்லறிவின் முனைப்பால், அவர் இகழ்ந்து ரைத்தால் அவ்வளவில் அவை இழிந்தவாய்விடுமோ? சாதிக் கட்டைச் சிதைத்து உண்மையன்பால் அறிவால் உயர்ந்த மேலோர்பால் உயிரும் உடலுமாய்க் கலந்து ஒழுகுதலாற் போதரும் பொல்லாங்கின்னதெனக் காட்டாமல், வீணே அம் மேலோர் தம் ஒழுக்கத்தைப் பழித்துப் பேசிவிடுதலால் அது பொல்லாங் குடையதாய் விடுமோ? ஞாயிற்றின் பேரொளி யினைக் கண்டு குரைக்குங்குக்கல், அவ்வாற்றால் அஞ் ஞாயிற்றின் பெருமையினைக் குறைக்க வல்லதாமோ? ஆதலால், அறிவு அன்பு ஒழுக்கஞ் சிவநேயம் அடியார் நேயங்களிற் சிறந்தார் ‘எக்குடிப் பிறப்பினும் எவரேயாயினும்’ அவரோடு அன்பினால் ஒருங்கு அளவளாவி வாழ்தலே உயர்ந்த நடையாகுமன்றி, அந் நலங்கள் சிறிதுங் “கல்லா ஒருவன் குல நலம் பேசுதல், நெல்லினுட் பிறந்த பதராகுதல்” திண்ணமாதலால் அவனை யொத்தார்பால் உடன் கூடி வாழ்தல் உயர்ந்தநடை யாகாமல் இழுக்கப்படு மென்க. எனவே, நாம் பெரியராகல் வேண்டுமாயின், பெரியரான அப்பர் சுந்தரர் முதலான நம் ஆசிரியன்மார் நடந்துகாட்டியபடியே சிவநேயம்மிக்கு அடியார்பால் ஏதும் வேற்றுமை காணாது அன்பினால் அளவளாவுதலே செயல்வேண்டுமன்றி, ஏனைச் சிறியார் செய்யுஞ் சாதிவேற்றுமைக் கட்டிற் கிடந்து நம்மையும் நம்மைச் சார்ந்தாரையும் அல்லற் கடலுட் படுப்பித்துப் பிறவித் துன்பத்தைப் பெருக்கலாகாதென் றுணர்ந்துகொள்க.

இனி, அப்பர் சுந்தரர் சாதிச்செருக்கை மாய்த்து முறையே சிவநேயம் மிக்காருடனிருந்து உணவுகொண்டதும், அவரைத் திருமணம் புரிந்ததும் திருவருளால் உந்தப்பட்டுச் செய்த செயல்களாதலால், நான் என்னும் முனைப்புடைய நம் போல்வார் அவர் போற் செய்தலாகாது என்று அம் மறுப்புரைகாரர் அடுத்தடுத்துக் கூவுகின்றார். திருவருளியக் கத்தால் அடியார்பால் நிகழுங் செயல்கள் வை, தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/201&oldid=1583932" இலிருந்து மீள்விக்கப்பட்டது