கருத்தோவியம்
181
ஏற்று நடத்தல் வாய்வதாகும், மற்று அவர் நடந்த நடைகளைப் பார்த்து அவ்வாறு நடத்தல் வாயாது என்பதுபட அம் மறுப்புரைகாரர் தெளிவின்றிச் சில வரைந்தார். இவர் சொற்கள் நமக்கு இறும்பூதினை விளைத்தன.நம்மாசிரியன்மா ரெல்லாம் அன்பினையே யுயர்த்திச் சாதியினை இழித்துப் பேசியிருப்ப, ‘முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைப்பதோடு’ ஒப்ப, அவர்கள் அங்ஙனம் அறிவுரை கூறவில்லையென்று அம் மறுப்புரைகாரர் கூறியது எவரை ஏமாற்றுதற்கோ! நம் ஆசிரியன்மார் அங்ஙனங் கூறிய அறிவுரைகளை யெல்லாஞ் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்னும் எமது நூலில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றோம். அவற்றைக் காணாதார், “சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள்
கோத்திரமுங் குலமுங்கொண்டு என்செய்வீர்’
என்றும்,
66
“எவரேனுந் தாமாக இலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி
உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்து.....
என்றும் போந்த திருநாவுக்கரசு நாயனார் திருமொழிகளையும்,
“நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்
சொல்லாள வல்லாற் பொருளில்லைத் - தொல்சிறப்பின்
ஒண்பொரு ளொன்றே தவங்கல்வி ஆள்வினை
என்றிவற்றான் ஆகுங் குலம்”
என்றும்,
“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கி லுள்ள படி
وو
என்றும் போந்த சான்றோர் திருமொழிகளையுங் கருத்தில் இருத்தி, எவரும் அம்மறுப்புரைகாரர் சொல்லில் ஏமாறா திருக்கக் கடவராக!