உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

  • மறைமலையம் -16

னிச், சிவஞானசித்தியார் “தவஞ்செய் சாதி” என்று கூறுகின்றதே யன்றிப் பிறப்பளவிற் சாதியென்று யாண்டுங் கூறாமையாற், பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம் மறுப்புரைகாரர் அதனை யெடுத்துக் காட்டியது,தமது கொள்கையினை அது வேரோடு அறுக்கும் ஞானவாள் என்பதை அறியாமையாற் போலும்! இங்ஙனமே தெய்வத் திருவள்ளுவர் அருளிச் செய்த,

“மேற்பிறந்தும் மேல்அல்லார் மேலல்லர் கீழ்ப்பிறந்துங் கீழல்லார் கீழல் லவர்’

(குறள் 973)

என்னும் அருமைத் திருக்குறள், 'தம்மைப் பிறப்பளவில்

உயர்ந்தவராகச்

சொல்லிக்கொள்வாரது

பிறந்தவராயினும், உயர்ந்த குணச்செயல்கள்

குலத்திற் ல்லாதவர்

உயர்ந்த குலத்தவர் ஆகார்; பிறரால் இழிந்த குலத்தவராக ஒதுக்கப்பட்ட வகுப்பிற் பிறந்தவராயினும், உயர்ந்தகுணச் செயல்கள் உடையவர்கள் கீழ்மக்களாகமாட்டார்' என்று எளிதிற் பொருள்தந்து, அம் மறுப்புரை காரர் பிறப்பளவிற் கொண்ட சாதிப் பதர்க்கொள்கையினை எரித்துச் சாம்ப ராக்குங் கொழுந் தீயாயிருந்தும், அதனை இவர் கையி லெடுத்தது எத்துணைப்பேதைமை, குலங்,குடி சாதி என்னுஞ் சொற்களை ஆன்றோர் நூல்களிற் கண்டுவிட்டால், உடனே அம் மறுப்புரைகாரர், சாதி வேற்றுமை நம் தொல்லாசிரியர் நூல்களிற் சொல்லப்படுகின்றது. அஃதவர்க்கு உடம்பாடு என்று சொல்லப் பதறுகின்றார். ஆனால், நம் ஆசிரியன் மாரோ அன்பு அறிவு அருளொழுக்கம் சிவநேய அடியார் நேயங்களின் மிக்காரை யெல்லாம் ஓரினப்படுத்தி உயர்ந்த சாதியாராகவும், அந் நலங்கள் இல்லாதாரை அவரின் வேறுபடுத்தித் தாழ்ந்த சாதியாராகவுங் கொண்டிருக்கின்றார்; அங்ஙனம் எம்மாசிரியர் குணத்தாற் செயலாற் கொண்ட சாதி வேற்றுமை எமக்கும் உடம்பாடேயாம்; ஆனாற் குணத்தையுஞ் செயலையும் பாராமற் பிறப்பளவிற் சாதிவேற்றுமை பாராட்டும் அம் மறுப்புரைகாரரின் தீய சாதிவேற்றுமைதான் எமக்குடம் பாடாகாதது. அருச்சுனற்குக் கீதைநூல் அறிவுறுத்திய கண்ணனும் அவரவர் குணத்தாலுஞ் செய லாலுஞ் சாதி வகுத்தேன்” என்று கூறுதலுங் காண்க. உண்மை

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/207&oldid=1583948" இலிருந்து மீள்விக்கப்பட்டது