உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

185

கிறித்துவ மதத்தைத் தழுவினவர்களும் எண்ணிறந்தவர் களாவர். இங்ஙனம் இவ்விந்தியநாட்டு மக்களில் மூன்றிலொரு கூறார் அயல்நாட்டவர் மதங்களைத் தழுவி, அவ்வாற்றாற் பல நலங்களை அடைந்தனர். இப்போதுஞ் சாதி வெறிபிடித்த மறுப்புரைகாரர் போல்வார் செய்யுங் கொடுமைகட்கு அஞ்சியும், இந்துமதத்தின் பெயரால் இன்னவர் செய்யும் அறிவற்ற நடுவுநிலையற்ற செயல்களைக் கண்டு அருவருத்தும் ஒவ்வொரு நாளும் அயல்மதம் புகுவார்தொகை பெருகியே வருகின்றது. இவ்வாறு நிகழும் நிகழ்ச்சிகளை வரலாற்று நூல்களால் அறிந்து கொள்ளும் ஆங்கில உணர்ச்சி வாயாத சாதிச் செருக்கர்கள், திருநெல்வேலி நாட்டையும் மலையாள நாட்டையும் போய்க் காண்பர்களாயின், அந் நாடுகளில் முறையே கிறித்துவர் தொகையும் மாப்பிளைத் துருக்கர் தொகையும் மிகுந்திருத்தற்குக் காரணம், மற்றை நாடுகளைவிட அந் நாடுகளிற் சாதிவெறி பிடித்தார் கூட்டம் மிகுதியா யிருப்பதுவேதான் என்பதனை நன்கறிந்துகொள்வர்கள். அதுகிடக்க,

இனித், திருக்கோயில்களி னுள்ளே தீண்டாதவர்களை விடாமை ஏன் என்றால், அவர்கள் மாட்டிறைச்சியுண்டு, கட்குடித்து, ஆண் பெண்கள் வரைதுறையன்றி ஒருவரை யொருவர் மருவிக் களித்துத், துப்புரவின்றி முடைநாற்றம் வீச உலவுதலாலே தான் என்று சாதி வெறியர்கள் கூறுகின்றார்கள். ஆனால், தீண்டாதவர்கள் மட்டுந்தாம் இங்ஙனம் நடப்பவர் களா என்று உற்றுநோக்கினால், அவர்கள் நிகழ்ந்துந் தடை பொருந்தாப் புல்லுரையேயாதல் நன்கு விளங்கும். இப்போது திருக்கோயில்களின் உட்செல்வார் எல்லாரும் புலாலுங் கள்ளும் மறுத்து, ஒருவனையே மருவும் ஒருத்தியும் ஒருத்தி யையே மருவும் ஒருவனுந் தாமாவென்று ஆராய்ந்து பார்மின்கள். பார்ப்பனர் சைவர் என்று பெயர் கொண்டாரில் எத்தனையோ பெயர் தீண்டாதவர்க்கு வறுமையால் உண்ணக் கிடைக்காத வகையான விலங்கின் இறைச்சிகளையும் எத்தனை யோ வகையான சாராயங்களையுந் தாம் உட்கொள்ளு கின்றார்கள் என்பது நாடெங்கும் பேச்சாய்க் கிடக்கின்றது! இவர்களுள் எத்தனையோ பெயர் குறத்தி புலைச்சி முதலான தம்மால் விலக்கப்பட்ட மகளிரையுங் கூடிக் களிக்கின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/210&oldid=1583952" இலிருந்து மீள்விக்கப்பட்டது