உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

வ்

மறைமலையம் 16

ரென்னுஞ் சொல்லும் ஊரெங்கும் உலாவுகின்றது! இவர் களெல்லாங் கடவுளிடத்து அன்புடையார்போற் றம்மைப் பிறர் மெச்சிக் கொள்ளும் பொருட்டுக் கோயிலினுள்ளே ஆடம்பரத்தோடு செல்ல வில்லையா! பார்ப்பனர், சைவரிற் பலர் மறைவிலாவது ஊனுஞ் சாராயமும் உட்கொள் கின்றார்கள். இவ் விருவகுப்பின ரல்லாத ஏனை வகுப்பினர் எல்லாருமோ வெளிப்படையாக ஆட்டிறைச்சி கோழியிறைச்சி முட்டை மீன் முதலான எத்தனையோ வகையான ஊனை உண்பவர்களாயிருக்கின்றார்கள். இவர்களில் எத்தனையோ கள்ளுஞ்சாராயமும் வெளிப்படையாக அருந்து பவராயுங் காணப்படுகின்றனர். இவர்கள், எல்லாருங் காண கண்ட கண்ட மகளிரொடு உலவுதலைக் காணாதவர் யார்? இவர்கள் திருவிழாக்காலங்களிலும் மற்றை நாட்களிலும் வேசியரையும் பிற மகளிரையும் அழைத்துக்கொண்டுதிருக்கோயில் களினுள் வரவில்லையா?

பலர்

அதுவேயுமன்றி, ஒவ்வொரு கோயிலிலுங் கோயிலுக் கன்று விடப்பட்ட பரத்தையர்கள் எத்தனைபேர்! இவர்க ளல்லாந் தனித்தனியே ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவர் களா? இல்லையே; பொருள்தருவார் எவராயிருப்பனும் அவர்தோள் மருவிக் களிப் பவரல்லரோ! இன்னும், இவரே யன்றித் தமிழ்நாடல்லாத பிற நாடுகளிலிருந்து வந்து திருக்கோயில்களினுட் சென்று வணங்குவார் தொகைக்கு ஒரு கணக்குண்டோ? இவர்களில் இன்னார் தீண்டத்தக்க சாதியார் மற்று இன்னார் தீண்டத்தகாத சாதியாரென்று பகுத்துக் கண்டவ ருண்டோ? இன்னுந், தமிழ்நாட்டிலேயுங்கூட ஓர் ஊரில் தீண்டாதவர் என்று சொல்லப் படும் மக்கள், பிறிதோர் ஊரிலுள்ள திருக்கோயிலினுட் சென்று வணங்கி வருதலும் மறைவாக நிகழ்ந்துவருதலை அறியாதார் யார்? வெறுந் தோற்றத்தளவில் இவர் உயர்ந்த சாதியார், இவர் தாழ்ந்த சாதியார் என்று பகுத்தறிதற்குரிய அடையாளங்களை எல்லாம் படைத்த றைவன் எந்த மக்களுடம்பிலும் படைத்து வையாதிருக்க, அவன் திருவுளக் கருத்துக்கு முற்றும் மாறாக, ஒருவர் தம்மை யுயர்ந்தவராகவும் மற்றையொரு வரைத் தாழ்ந்தவராகவுந் தமது இறுமாப்புனாற் கருதிக் கொண்டு, தம்மாற் றாழ்த்தப் பட்டவர்க்கு அளவிறந்த கொடுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/211&oldid=1583955" இலிருந்து மீள்விக்கப்பட்டது