உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

187

களைத் தொடர்பாகச் செய்வது, அங்ஙனஞ் செய்வார் தம்மை வேரோடு அழிக்குங் கருவியாய் வலிவேறி வருதலை அம் மறுப்புரைகாரர் அறியார் கொல்லோ!

இனித், தீண்டாதவர்பால் முடைநாற்றம் வீசுகின்ற தெனக் கூவுவோர், அவர் செய்யுங் கடுமையான தொழில் களையும், அத்தொழில் மிகுதியாலுங், குளித்து முழுகித் துப்புர வாயிருக்கத் தக்க வசதிகளைச் சாதிக்கிறுக்கர்கள் அவர் கட்குத் தராமையாலும், வறுமையால் நல்ல ஆடை உடுக்கவும் நல்ல வீடுகளில் இருக்கவும் இயலாமையாலும் அவர்கள் அங்ஙனம் அழுக்கேறி முடைநாற்றம் வீசப் பெறுகின்றார் களென்பதை அறியாததென்னையோ! அவர் செய்து தருந் தொழில்களி னுதவியாற் செல்வமுடையராகித் துப்புரவான ஆடைகளும் அகன்ற பெரிய இல்லங்களும் பெற்றுக் கொழிக்குஞ் சாதிக்கிறுக்கர்களைப் போல், அவ் வேழை யெளியவர்களும் இனிது வாழப்பெற்றால் அவர்கள் பால் அந் நாற்றங் காணப்படுமோ? விலக்கப்பட்ட வகுப்பாரிலிருந்து கிறித்துவ L மகமதிய மதங்களுட் புகுந்து நிலையுயரப் பெற்ற வர்க்குள் இத்தகைய முடை நாற்றங் காணப்படுகின்றதா? சிறிதும் இல்லையே! சாதிக்கிறுக்கர்கள் தாம் பயன்படுத்துங் கிணறுகள் குளங்கள் முதலான நீர்நிலைகளில், அவ்வேழை யெளியவர்களை ஒரு குடங்கை நீரும் எடுக்க விடாமை யாலன்றோ தம்மைப்போல் அவர்களுந் தக்க இடங்களில் இல்லங்களமைத்துக்கொள்ள சையாமை யாலன் றோ ஐயோ? அவர்கள் எல்லாரும் அங்ஙனம் இரங்கத்தக்க நிலையிலிருந்து ங்ஙனம் அவ்வேழை யெளியவர்கள் அருவருக்கப்படும் நிலையி லிருத்தற்குக் காரணம் சாதி வெறிபிடித்தவர்களே யாதலால், அவ்விரங்கத்தக்க பயன்படுமக்களை அங்ஙனம் இழித்து ரைத்தலினும் பெரியதொரு வன்கண்மை பிறிதில்லை யென்க.

இன்னலுறுகின்றார்கள்!

இனித், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதுஞ் சாதிச் செருக்கர்காளவாது முடைநாற்றமின்றி நறுமணங் கமழப் பெறுகின்றார்களாவென்று சிறிது கூர்ந்து பார்மின்கள்! காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகளை உட்கொள்ளலாலும், வெற்றிலை புகையிலை முதலான தீ நாற்ற மயக்கப் பொருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/212&oldid=1583957" இலிருந்து மீள்விக்கப்பட்டது