உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் 16

காதலன்பு கொண்டார்க்கு அக் காதலன்பின் வழியே மனஞ் செல்லுமென்ற எமதுரையை மறுப்பான் புகுந்த அம் மறுப்புரைகாரர், விரும்பத்தக்க தொன்றனை மனமானது முதலிற் பற்றிய பின்னரே தான் காதல் நிகழும், அதன்பிற் காதல் சென்ற வழியே மனஞ் செல்லுமென ஒன்றனை யொன்று பற்றுதல் என்னுங் குற்றம் (அந்யோந்யா சிரய தோஷம்) படமொழிந்தார்; என்னை? மனத்திற்பிற் காதலுங், காதலின்பின் மனமுஞ்செல்லுமென்றல் அக் குற்ற முடைய தாகலினென்பது, மனம் முன்னரொரு பொருளைப் பற்றினாலன்றி உணர்வு உண்டாகாமை யுண்மையே யாகலின், மற்று அக் குற்றம்படாமை யுரைக்குமாறு யாங்ஙன மெனிற், காட்டுதும். மெய்வாய் கண் மூக்குச் செவி யென்னும்

ஐம்பொறிகளின் வாயிலானன்றி மனம் புறக்கே ஒரு

பொருளைப் பற்றாது; ஆகவே, அப் பொறியுணர்வுகளைப் பற்றிநின்று மனம் ஒரு பொருளைப் பற்றுகின்றுழி, அஃது அப் பொறியுணர்வி னளவாயே நிற்கு மல்லது, அவற்றின் வேறாய் நின்று தான் கண்ட பொருட்குணங்களை ஆராயாது; இது குறித்தே, உற்றறிதலாகிய ஓரறிவுமுதல், சுவை ஒளி ஓசை நாற்றம் ஈறாக ஐந்தறிவு உடைய சிற்றுயிர்கட்கு ஆசிரியர் தொல் காப்பியனார் மனவுணர்வு கூறிற்றிலர். ஏனை மக்களாவார், அவ் வைந்தறிவுகளோடு இஃது இதனை ஒப்பது, இஃது இதனின் வேறாவது, து நல்லது, இது தீயது'

என

ஆராய்ந்தறியு மறிவும் உடன் உடையாராகலின் அவரைச் சுட்டி 'மக்க டாமே யாற்றி' வுயிரே' என்று அவர் அருளிச்செய்தார். அற்றேல் "ஐம்பொறிவை ஆண்டு அங்கு அரசாய் உளம் நிற்ப” என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனா ருரையொடு மாறு கொள்ளாதோ வெனிற், கொள்ளாது; பொறியுணர்வின் வேறாய் நில்லாது, பொறி வுணர்வினளவாயே நிற்பது மனத்தின் பொதுவியல்பு ஆகும்; மற்றுப்,பொறிகளின் வாயிலாய் அறிந்த பொருட்பண்புகளைத் தான் தனி நின்று ஆராயுமாயின் அதுதான் மனத்திற்குச் சிறப்பியல்பு ஆகும்; மக்களல்லாத சிற்றுயிர்களில் மனவுணர்வு தனித்து நில்லாது பொறிகளினளவாயே நிற்றலின் அவை மனவுணர்வு இல்லா தன வென்று கொள்ளப்பட்டன; மற்று, அம் மக்களின் அது பொறியுணர்வுகளின் வேறாயும்நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/221&oldid=1583969" இலிருந்து மீள்விக்கப்பட்டது