உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

197

ஆராய்ந்தறியுஞ் சிறப் பியல்பும் உடைமை பற்றி, அவர் மனவுணர்வும் உடையரெனப் பட்டார். ஆகவே, சிறப்பியல்பு காட்டாமற் பொறியளவாய் நிற்கும் மனவுணர்வைச் சிற்றுயிர் கட்குத் தொல்காப்பியனார் கூறாமை பெரிதும் பொருத்த மாவதேயாம். என்றாலும், மனத்தின் சேர்க்கையின்றிப் பொறி யுணர்வுகள் நிகழாமையின், மக்கட்கும் ஏனைச்சிற்றுயிர்கட்கும் மனவுணர்வு உண்டென்பது தேற்ற மேயாம். இவ்வாறு மனத் தினியல்பைக் காண வல்லார்க்குத், தொல்காப்பியனாருரையும் மெய்கண்ட தேவரு ரையுந் தம்முன் முரணாமை எளிதின் விளங்கும். அதுநிற்க.

பொறியுணர்வுகளோடொன்றாய் நிற்கும் மனத்தின் வழிச் சென்று கண்டகண்ட பொருள்களை யெல்லாம் விழையும் இயற்கையதே காமவிருப்பம்; அங்ஙனங் கண்டவற்றி லெல்லாம் அவாச் செல்லாது மனத்தின் பொதுவியல்பை யடக்கி, மிகச் சிறந்ததொரு பொருளிடத்தேமட்டும் நினைவு அழுந்தி அன்பு மீதூரப்பெறுவதே காதல்விருப்பமாகும். எனவே, புலணுணர்வு களின்பாற் பொதுமையின் நிற்கும் மனத்தின்வழிச் செல்வது உயிரின் காமவிருப்பமேயா மென்பதும், அங்ஙனம் வரைதுறையின்றி ஓடற்பாலதாகிய உயிரின் விருப்பத்தைத் தடைசெய்து விழுமியதொரு பொருளினிடத்தே மட்டும் உறைந்து நிற்குமாறு செய்வதே காதல் விருப்பமாமென்பதும் இனிது பெறப்படுதலிற், காதல் மனத்தின் வழிய தன்றென்னும் எமதுரையே பொருத்த மாதல்கண்டுகொள்க. காதற்றேற்றத் திற்குப் பொறியுணர்வாய் நிற்கும் மனம் வாயிலாதல்கொண்டு, காதல் அம் மனத்தின் வயமாய் அடக்குதலினும் அறிவின்மை யாவது பிறிதில்லை; விறகிலிருந்து தோன்றுந் தீ அவ் விறகின் வலிக்கு அடங்கிய தென்பாருரையொடு ஒன்றாகவைத்து அம் மறுப்புரை காரருரை நகையாடி விடுக்கற்பாலதாமென்றொழிக.

இனிப் பண்டைக்காலத்துத் தண்டமிழ்ச் சான்றோ ரெல்லாரும் இன்பத்துக்கே முதன்மைதந்தியற்றிய பொய்யாச் செந்தமிழ்ச் செய்யுள்வழக்கின் மிகுதியை யாம் எடுத்துக் காட்டி யிருக்கப், பொய்ந்நூல்களாகிய புராணங்களின் விரிவையும் மெய்ந்நூலாகிய சிவஞானபே தத்தின் சுருக்கத் தையும் எமதுரைக்கு உவமையாக எடுத்துக்காட்டி எம்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/222&oldid=1583970" இலிருந்து மீள்விக்கப்பட்டது