உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் 16

இகழ்கின்றார். பண்டைச் செந்தமிழ்நூல்கள் வடமொழிப் புராணங்களைப் போற் பொய்ந் நூல்களாயிருப்பினன்றோ, அவற்றை அவர் அவற்றிற்கு உவமையாக எடுத்துக்காட்டலாம். பொய்ப் பொருள் ஒன்றுமே விரவாத முழுமணித் தொகுதி யாகிய பண்டைச் செந்தமிழ் இலக்கியங்களைப், புராணப் பொய்க்குப்பைகளோடு ஒப்புமைப் படுத்திய அம் மறுப்புரை காரரின் பொய்யறிவின் பெற்றிமைக்கு அறிவுடையார் இரங்கு தலே செயற்பாலார் பொய்யறி வினார்க்கு மெய்யும் பொய் யாகக் காணப்படுமென்பதற்கு அம் மறுப்புரைகாரர் ஓரிலக் கியமாதல் காண்மின்!

66

இன்பமும்

இனித், தொல்காப்பியநூல் தனக்குமுற்பட்ட இலக்கிய நூல்களின் அமைதியைப் பார்த்துச் செய்யப்பட்டதொரு பழைய நூலாகலின், தொல்காப்பியத்தில் பொருளும் அறனும்' என்று வைத்துச் சொல்லப்பட்டமுறை, ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் முற்பட்ட தனிச் செந்தமிழ்ச் சான்றோர் கொண்ட முறையேயாகும். ஆகவே, தொல்காப்பியனார் கொண்ட முறையே, செந்தமிழ்ச் சான்றோர் வழிபேணும் எம்மனோர் பேணுதற்குரித்தாவது, தொல்காப்பியனார்க்குப் பின்வந்த நூல்களில் ஆரியமொழிக் கலப்பும் பௌத்த சமண்கோட் கலப்புங் காணப்படுதலின், அவை யெல்லாந் தொல்காப்பியம்போல் எமக்குத் தலைசிறந்த மேற்கோள்கள் ஆகா; தொல்காப்பியத்தோடு மாறு கொளா இடங்களில் மட்டுமே ஏனைப் பின்நூல்களில் வந்தவை எம்மாற் றழுவற்பாலன; மற்றுத், தொல்காப்பியத்தொடு மாறுபடு மிடங்களிலெல்லாந், தொல்காப்பியமே தழுவற்பால தன்றி ஏனைய அல்லவென்று துணிக; என்னை? தொல்காப்பியத் தோடு எதிர்நிற்கவல்லது ஏதுமேயில்லையாகலின். தெய்வத் திருவள்ளுவருந் தொல்காப்பியத்தொடு மாறுபடாமைப் பொருட்டன்றோ, தமக்கும் பிறர்க்கும் இன்பத்தைத்தரும் இல்லறத்தை முன்வைத்து,

அவ்வில்லறத்தோடொத்த

துறவறத்தை அதன் பின் வைத்ததூஉம், நூலிறுதியிலுங் காதலின்பத்தையே மிகுத்துக் கூறியதூஉம் என்க. 'இன்பம் பொருள் அறம்' என்னும் முறையைத் தொல்காப்பியத்தி னின்றும் யாம் எடுத்துக் காட்டியிருக்க, ஒரு நூலிலிருந் தாயினும் யாம் அம் முறையை எடுத்துக்காட்ட வில்லை யென்ற அம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/223&oldid=1583971" இலிருந்து மீள்விக்கப்பட்டது