உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 16.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தோவியம்

229

சொல்லொப்புமை பற்றி அவ்விரண்டு சேரமன்னரும் ஒருவரே எனத் துணிதல் சிறிதும் பொருந்தாதென்க.

அற்றாயினும், முன்னர் எடுத்துக் காட்டிய கல்லாடச் செய்யுட் பகுதியிற் ‘பரிபுரக்கம்பலை இரு செவியுண்ணுங், குடக்கோச்சேரன்’ என அச் சேரற்கு அடை மொழியாய்ப் போந்த சொற்றொடர், நாடோறும் இறைவற்கு வழி பாடாற்றுங் காலங்களி லெல்லாம் இறைவன் இயற்றுந் திருக் கூத்தினான் அவர்காற் சிலம் பொலியினைக் கேட்டவர் சேரமான் பெருமாளே யன்றி வேறு பிறர் அல்லர் என்பதனை விளக்கு மென்பதற்குப் பெரிய புராணத்தின்கட் காணப்பட்ட அவர் வரலாறே சான்றாயிருந்தலிற் கல்லாடச் செய்யுளிற் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழரான சேரமான் பெருமாளே யாமெனின். அதுவும் பொருந்தாமை காட்டுதும். பெரிய புராணத்தின்கட் கூறப்பட்ட வரலாறுகள் அதற்கு முற்பட்ட நூல்களிற் காணப்படாமை யோடு, அவற்றோடு மாறு கொண்டும் நிற்குமாயின் அவை கொள்ளாற் பாலன அல்ல வென்பதை மேலே காட்டினாம். சேரமான் பெருமாள் நாடோறும் தாம் இயற்றிய வழிபாட்டு முடிவின்கண் இறைவனார் திருச்சிலம் பொலி கேட்டு வந்ததுண்டாயின் அப் பெருஞ் சிறப்பினைப், பெரிய புராணத்திற்கு முற்பட்டு அதற்கு முதல் நூலாய் விளங்கிய நம்பி யாண்டார் நம்பி திருவந்தாதி கூறியிருத்தல் வேண்டும்; மற்று அதன்கண் அதைப் பற்றிய குறிப்பினைச் சிறிதுங் கண்டிலேம். ஆதலாற், “பரிபுரக் கம்பலை இருசெவி யுண்ணும்” என்னுங் கல்லாட அடைமொழித் தொடர் கொண்டு அதன்கட் குறிப்பிடப்பட்ட சேரமன்னர் சுந்தரமூர்த்திகளின் தோழரான சேரமான் பெருமாளே யென்று துணிந்துரைத்தல் பொருந்தா தென்க.

னிக், கல்லாடம் பெரிய புராணத்திற்கும் முற்பட்ட நூலாகலின், அதன்கட் காணப்பட்ட “பரிபுரக் கம்பலை இரு செவி யுண்ணுங், குடக்கோச் சேரன்' என்னுங் குறிப்பினையே பெரியபுராணம் பிழைபடத் திரித்தெடுத்துச் சுந்தரமூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாண் மேல் ஏற்றியுரைப்ப தாயிற்றென்று உணர்ந்து கொள்க. அங்ஙனம் அதன் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_16.pdf/254&oldid=1584010" இலிருந்து மீள்விக்கப்பட்டது