உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் 17

கேட்டால், “அவையெல்லாம் ‘பக்தி மார்க்கத்’தில் உள்ளார்க்குந் தகுங், ‘கர்ம மார்க்கத்'திலுள்ள நமக்கு அவை

என்கின்றார்கள்.

66

தகா

அதன்மேற், “பக்தி மார்க்கம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? அன்புநெறி அருள் நெறியைப் பரப்பிய நம் சமயாசிரியர் கடைப்பிடித்து ஒழுகிய முறைப்படி நாம் நடப்பது நன்றா? தீதா?” என்று வினவினால், அச்சாதி வெறிபிடித்த போலிகள், 'சமயாசிரியர் எய்தியநிலை வரும் வரைக்கும் நாம் அவர்போல் நடத்தல் தீதாகும்” என்று விடை கூறுகின்றனர். அதுகேட்டு மீண்டும் அவ்வருட்செல்வர், “ஒற்றுமையின்மையால் வரும் பகைமை பொறாமையினாலும், அன்பு அருள் இன்மையால் வரும் வன்னெஞ்ச இறுமாப்பினாலும் பற்றப்பட்டிருக்கும் வரையில் மக்கள் சமயாசிரியர் நிலையினையெய்தல் யாங்ஙனங் கைகூடும்?” என்று கேட்பின், அதற்கவர் விடைகூற மாட்டாமல் மெல்ல எழுந்து நழுவிப் போய்விடுகின்றனர்.

உண்மையான் நோக்குங்காற், சாதி வெறியர்க்குத் தம்முடம்போடு அழிந்தொழியுஞ் சாதிதான் பெரிதாகக் காணப்படுகின்றதேயன்றி உடம்பழியினுந் தான் அழியாதாய்த் தம்முயிரோடு உடன்வருஞ் சமயவறிவு பெரிதாகக் காணப்பட வில்லை. தம் சமயாசிரியர் வழி நடவாத இவர்கள், தம்மைச் ‘சைவர்’ என்று உயர்த்திப் பேசிக்கொள்வதும் அவர் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஓதுவதும், அவரைப் பாராட்டிப் பேசுவதும் நகைப்புக்கேயிடமாயிருக்கின்றன.

தமது சமயத்தினுந் தஞ்சாதியையே அவர்கள் மேலதாய்க் கருதுகின்றனர் என்பதற்கு, அவர்கள் தஞ்சமயத்தவரல்லாத வைணவர் சிலர் தமக்கு உறவினராதல் பற்றி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்தலே சான்றாகும். தம்முடைய சைவ வைணவ சமயந் துறந்து கிறித்துவ சமயம் புகுவாருஞ், சாதி வேற்றுமைக்கு எள்ளளவும் இடம் இல்லாத அக்கிறித்துவ சமயம் புகுந்த பின்னருந் தமது பாழ்த்த சாதி வேற்றுமையினை விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டு, தாம் இறைவனைத் தொழச் செல்லுந் திருக்கோயில்களிலுங் கலகம் விளைக்கின்றன ரென்றாற், சாதியிறுமாப்பின் கொடுமையை என்னென்றெடுத் துரைப்பேம்! திருக்கோயில்களிலுஞ் சாதிவேற்றுமை பாராட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/169&oldid=1584393" இலிருந்து மீள்விக்கப்பட்டது