உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

6

149

ஈதென்ன கொடுமை பாருங்கள்! தமிழ்மொழி வழங்கும் த்தென்னாட்டில், தமிழ் அரசர்களாலுந் தமிழர்களாலும் அமைக்கப்பட்டுச், சைவசமயாசிரியர்களால் தமிழ்மொழி யிலேயே சிறப்பித்துப் பாடப்பெற்ற திருக்கோயில்களிலேயே தமிழ் மந்திரங்களை வழங்காமற் செய்து, இத்தமிழ்நாட்டுக்கும் இங்கு வணங்கப்படுஞ் சிவபிரானுக்கும் அவனை வணங்குந் தமிழ் மக்களுக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாத, அவர்களுக்குச் சிறிதும் தெரியாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து அவற்றைக் கொண்டே அத்திருக்கோயில்களில் எல்லா வழிபாடும் நடக்கும்படி செய்துவிட்டபார்ப்பனர் தஞ் சூழ்ச்சியையும் அஞ்சாநெஞ்சையும் ஆண்மையையும் எண்ணிப் பாருங்கள்!

இத்தமிழ்நாட்டின்கண் எத்தனையோ கோடிக்கணக்கான

தமிழ்மக்களும், நூறாயிரக்கணக்கான செல்வர்களும், ஆயிரக் கணக்கான சிற்றரசர்களும் நூற்றுக்கணக்கான மடாதிபதிகளுந் தமிழ்ப்புலவர்களும் நிறைந்திருந்துந், "தமிழர்களாகிய எங்களுக்குக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மாமந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல், எங்களுக்குப் புறம்பா எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள்?” என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா?

இத்துணைப் பெரிய இத்தமிழ்நாட்டில், எத்தனையோ கோடிக்கணக்கான தமிழ்மக்கள் நிறைந்த இத்தென்னாட்டில், எல்லாம் வல்ல இறைவனை நேர்முகமாய்க் கண்டு திருப்பதி கங்கள் அருளிச் செய்த தெய்வ ஆசிரியர் நிலவிய இத்தெய்வ நாட்டில், எல்லா இடங்களிலுஞ் சிறந்ததான தூயதான தெய்வம் உறைவதான திருக்கோயிலிலேயே நம் தெய்வ ஆசிரியர் அருளிய தமிழ் மந்திரங்கள் நிலவாமல் அவற்றைப் புறந்தள்ளித், தெய்வத் தன்மை சிறிதுங் காணப் படாத வடமொழிச் சொற்களைக் கொணர்ந்து நுழைத்து அவற்றைப் பெருமைப்படுத்தித், தேவார திருவாசகச் செந்தமிழ் மாமறைகளைச் ‘சூத்திரப்பாட்டு' என்று இழித்துப் பேசும் பார்ப்பனர்கள், எந்தக் காலத்திலாயினும் இந்நாட்டுக்குக் குடியரசு வருவதாயிருந்தால், அதன்கண்ணுந் தமக்கு ஆட்சியை யும் ஆக்கத்தையும் நிலைப்படுத்தி, ஏனை மக்களையெல்லாம் அறிவில்லாத குருடர்களாக்கித் தமக்கு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/174&oldid=1584400" இலிருந்து மீள்விக்கப்பட்டது