உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 17

அடிமைப்படுத்தி வைத்திருப்பரேயல்லாமல், அவர்கட்கு ஏதொரு சிறிய உரிமையேனுங் கொடுப்பர் அல்லது கொடுக்க விரும்புவர் என்று கனவிலும் நினைக்கின்றீர்களா? நினையாதீர்கள்!

பிணக்களங்கள்

நமக்கு உயிரினுஞ் சிறந்த திருக்கோயில் முதல் அரசியல் நிலைகள் கல்விக் கழகங்கள் கைத்தொழிற்சாலைகள் புகை வண்டி நிலையங்கள் உணவு விடுதிகள் மணக்களங்கள் ஈறான எல்லா இடங்களிலும் ஆரியப் பார்ப்பனர்களே ஆட்சியுந் தலைமையும் உடையவர்களா யிருந்து, ஏனை வகுப்பினரின் முன்னேற்றத்திற்குப் பெருந்தடை விளைப்பவர்களாய் இருக்கின்றார்கள். ஏனை வகுப்பினர் எல்லாரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி, அவர்கட்குள் பல்வேறு சமயப்பிரிவு சாதிப் பிரிவுகளையுண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தஞ் சமயமே தத்தஞ் சாதியே உயர்ந்ததென்று சொல்லி ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப் போராட்டத்திற்கு இ டமாக இராமன் கதை கண்ணன் கதை, கந்தன் கதை, விநாயகன் கதை, காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து அவற்றை இராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்து வழங்கி, அவைதம்மை மற்றையெல்லா வகுப்பினருங் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொள்ளும்படி செய்துவிட்டார்கள்.

கதைகளை

தமிழரில் ஆராய்ச்சியறிவுடையார் எவரேனுந் தமிழ் மக்கள் இங்ஙனங் குருட்டு நம்பிக்கையால் அழிந்து போவதைக் கண்டு இரங்கி, "இப்பார்ப்பனக் கட்டான நம்பவேண்டாம். அறிவு விளக்கத்திற்குந் தூய ஒழுக்கத்திற்கும் உதவி செய்யும் உயர்ந்த தமிழ் நூல்களை ஆராய்ந்து பயிலுங்கள்! குலமும் ஒன்றே, குடியும் ஒன்றே, வழிபாடு தெய்வமும் ஒன்றே” என்று பொதுமக்கட்கு அறிவு தெருட்ட முன் வருவாராயின், உடனே அப்பார்ப்பனரெல்லாரும் ஒரேமுகமாய் நின்று அவரை ‘நாத்திகர்’, ‘பிராமண நிந்தகர்’, ‘வேத நிந்தகர்' என்று பலரறியத் தூற்றி, அவரது அறிவுரை எவரது செவியிலும் ஏறாமற் செய்வதுடன், அவரது வாழ்க்கைக்கும் பல வழியில் தீங்கிழைக்கின்றார்கள்.

எவர்

மற்றை வகுப்பினரிற் செல்வமுடையவர்கள் இருப்பினும், அவரைப் பார்ப்பனர்கள் சூழ்ந்துகொண்டு, அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/175&oldid=1584402" இலிருந்து மீள்விக்கப்பட்டது