உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

153

கிடக்குஞ் சிற்றரசர்களுஞ் செல்வர்களும் மடத்தலைவர்களும் அப்பெரும்பொருட்டிரளில் ஒரு சிறு பகுதியை மட்டுந் தமக்கு எடுத்துக் கொண்டு, மற்றைப் பெரும்பகுதியைக் குறிப்பிட்ட முயற்சிகளுக்கு கொடுத்துவிடுமாறு, எந்தெந்த வகையில் முயலல் வேண்டுமோ அந்தந்த வகையலெல்லாங் கடைப் பிடியாய் நின்று முயலல் வேண்டும். முயன்று பெற்ற பொருளை இந்நன்முயற்சி களுக்குப் பயன்படுத்துவதிலும் மிக விழிப்பா யிருத்தல் வேண்டும். இங்ஙனம் ஒழுங்கான முறையில், நம் நாட்டவர்கட்கு உண்மையாகவே நலந்தரு முறையில், தலைவர்களாக வருவோர் தமது அரும்பெரும் முயற்சியைப் பயன்படுத்துவாராகவென்று எல்லாம் வல்ல இறைவனை

வேண்டுகின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/178&oldid=1584408" இலிருந்து மீள்விக்கப்பட்டது