உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

185

யார்க்கு அறிவித்தற் பொருட்டு வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பஃது என்று மொழி யாராய்ச்சிவல்ல அறிஞர்கள் கணக்கெடுத்திருக்கின்றார்கள். இங்ஙனம் ஒன்று குறையத் தோன்றிய ஆயிர மொழிகளிற், சிற்சிலவே பேசவும் எழுதவும் படுவன; அவற்றுள்ளும் ஒரு சிலவே இலக்கண இலக்கிய நூல்கள் உடையன; அவற் றுள்ளும் மிகச்சிலவே மிகப் பழைய மொழிகளாய் உள்ளன. இம்மூவகை நலங்களும் வாய்ந்தவை; தமிழ், எகுபதியம், சாலடியம், ஈபுரு, சீனம், மெகுசிகம், ஆரியம், கிரேக்கம், இலத்தீன், அராபி முதலிய சிற்சில மொழிகளேயாகும். இவை பண்டிருந்த நாகரிக மக்களாற் பேசவும் எழுதவும் பட்ட துடன், சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்களும் வாய்ந்தன வாய், எக்காலத்துந் தம்மைப் பயில்வார்க்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருக்கும் பெரும் பயனும் வாய்ந்த விழுமிய மொழிகளாகும். என்றாலும், இம்மிகப் பழைய மாழிகளில் தமிழ் ஒன்றைத்தவிர, மற்றையவெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் எந்த மக்கட் குழுவினராலும் பேசப் படாமல் இறந்தே போய்விட்டன. ஆகவே, இறந்த அப் பண்டைமொழிகளைப் பயில்வது, அவற்றின்கட் பண்டை ஆசிரியர்கள் இயற்றிவைத்த அரிய நூல்களைக் கற்றுப் பல பழம்பொருள்களையும் பல நுண்பொருள்களையும் அறிந்து அறிவு பெறுதற்குதவிசெய்யுமே யல்லாமல், இஞ்ஞான் றுள்ள எந்த மக்கட் கூட்டத்துடனுங் கலந்துபேசி உறவாடி வாழ்க்கை செலுத்துதற்கு அது சிறிதும் உதவி செய்யாது.

தமிழும் புதுமொழிகளும்

ஆனால், நமதருமைச் செந்தமிழ் மொழியோ மிகப் பழைய காலத்தேயிருந்து இன்றுகாறும் இனிவருங்காலத்தும் பலகோடி மக்களால் இந்தியா, இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான பற்பல நாடுகளிலும் பேசவும் எழுதவும் பட்டு வழங்கிவருந் தனிப்பெரும் பண்டை உயிருடை டைமொழி ஒன்றேயாய் விளங்கி நிலவுவது; இலக்கண நூல்கள் ஒழுக்க நூல்கள் அறநூல்கள் பொருள்நூல்கள் காவியநூல்கள் கதை நூல்கள் கணக்குநூல்கள் வான் நூல்கள் மருத்து நூல்கள் உரைநூல்கள் அறிவுநூல்கள் கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/210&oldid=1584457" இலிருந்து மீள்விக்கப்பட்டது