உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

  • மறைமலையம் -17

வழங்காமை அறியப்படுகின்ற தன்றோ? வடநாட்டிற் பெரும் பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்திமொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற் பேசி உறவாட முடியாதன்றோ?

இன் ன்னும் இங்ஙனமே ம கபீர்தாசர் காலம் முதல் அஃதாவது சென்ற 500 ஆண்டுகளாக வடநாட்டின்கட் டோன்றி, இராமகிருஷ்ண வணக்கங்களை இந்தியின் உட்பிரிவான சிலமொழிகளில் உயர்த்துப் பாடி அவற்றை வடநாடுகளிற் பரவச் செய்த இந்திமொழிப் புலவர்களின் வரலாறுகளை யெல்லாம் யெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இக்கட்டுரை மிக விரியும். ஆதலால், இதுவரையிற் கூறியது கொண்டு, இந்திமொழியானது 500 ஆண்டுகளுக்கு முன் நூல்வழக்கில்லாமற், கல்வியறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பலபகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப் பட்டு, ஒருபாலார் பேசும்மொழி மற்றொருபாலார்க்குத் தெரியாத வண்ணம் வழங்கினமையால், அஃது இஞ் ஞான்றுங்கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்து வழங்கு கின் ற ெ ன்பதும், அதனால் இந்தியை வடநாட்டவர் எல்லார்க்கும் பொதுமொழி யனக்

கூறுவாருரை

மெய்யாகா தென்பதும், ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வட நாட்டவ ரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.

அஃதுண்மையே யாயினுங், கபீர்தாசர் முதலான

இன்

புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களைப் படித்து புறுதற்காவது, இந்திமொழிப் பயிற்சி உதவி செய்யுமன்றோ வெனின்; தமிழ்மொழியிலுள்ள பழைய இலக்கியங்களைப் பயின்றறியாதார்க்கு, இந்திமொழிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் இனிக்கு மேனுங், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக் கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞான போதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களைப் பயின்று அவற்றின் அமிழ்தன்ன சுவையில் ஊறப்பெற்ற மெய்யறி வினார்க்கு, அவ்விந்திமொழிப் பாட்டுகள் இனியா. மேலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/221&oldid=1584468" இலிருந்து மீள்விக்கப்பட்டது