உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 17

மெங்கும் பதின்மூன்றரைக்கோடி மக்களாற் பேசப்பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் ஏழுகோடி மக்களாற் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இப்போது இரண்டு கோடிக்குங் குறைவான மாந்தர் கூட்டத்தாற் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறாகத் தமிழ்மொழி பேசுவோர் தொகை பத்தாயிர ஆண்டுகளாக வரவரச் சுருங்கி வருதலையும், ஆங்கிலமொழி பேசுவார் தொகை இரு நூற்றாண்டு களுக்குள்ளாக உலகம் எங்கணும் அளவின்றிப் பெருகி வருதலையும் உற்றுணர்ந்து நோக்குங்கால், தமிழ்மொழி சுருங்குதற்குக் காரணந் தமிழரிற் கல்வியறிவுடையவருங் கல்வி முயற்சியுடையவரும் வரவரக் குறைந்து போதலும், ஆங்கில

மொழி பெருகுதற்குக் காரணம் ஆங்கிலரிற் கல்வி யறிவுடையவரும் கல்வி முயற்சி யுடையவரும் நாளுக்கு நாள் மிகுந்து ஓங்குதலுமேயென்பது தெற்றென விளங்குகின்றது.

இனி, அங்ஙனந் தமிழரிற் கற்றார் தொகை அருகுதலும் ங்கிலரில் அவர் தொகை பெருகுதலுந்தாம் எதனா லெனின், தமிழரிற் செல்வம் உ டையவர்களெல்லாரும் இஞ்ஞான்று தமிழ்க் கல்வியறிவில்லாதவர்களாய் விட் டார்கள்; அதனால் அவர் தந் தாய்மொழியாகிய தமிழின் அருபெருஞ் சிறப்பும், அதனைக் கற்பதனால் மக்கள் அடையும் இம்மை மறுமைப் பெரும்பயன்களும் ஒரு சிறிதும் உணராத வராய் இருக்கின்றனர்; அதனால் அவர், தம்மைப்போலவே தமது நாட்டிற் பிறந்தவர்களெல்லாருஞ் செல்வ வாழ்க்கையிற் சிறந்து வாழல் வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கமுந் தினைத் தனையும் இல்லாதவராய் இல்லாதவராய் இருக்கின்றனர்! அதுமட்டுமோ! ஏழை எளியமக்கள் நாள் முழுதும் வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும் அரும்பாடுபட்டு உழவுத் தொழிலைச் செய்தும் பல்வகைக் கைத்தொழில்களைப் புரிந்தும் பெருவரு வாயினையும் நுகர்ச்சிப் பொருள்களையும் விளைத்துக் கொடுக்கச், செல்வராகிய தாம் உடல் வருந்தாமல் மூளை யுழைப்பில்லாமற் சிறந்த இல்லங்களிற் செருக்குட னிருந்து விலாப்புடைக்க உடல் கொழுக்கத் தின்று பஞ்சணைமேற் றுயின்று பல்வகை சிற்றின்பங்களை நுகர்ந்துந், தம்மை இங்ஙனம் இன்ப வாழ்க்கையில் வைத்துள்ள அவ்வேழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/233&oldid=1584483" இலிருந்து மீள்விக்கப்பட்டது