உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் -17

பார்ப்பனருக்குக் கொடுத்தற்கும், ஆங்கில மருத்துவஞ் செய்வார் செலவிற்கும், அழிவழக்காடுதற்கும், இன்னும் இவை போன்ற தீயவற்றிற்குந் தாம் அவரது பொருள் பயன்படும்; அல்லது அவர் பொருள் மேற்பொருள் சேர்த்து வைத்துவிட்டுச் சாகப், பின்வந்தோர் அவற்றையழித்துப் பாழாக்குதற்கே பயன்படும்! இவைகளைத் தவிர வேறெந்த நல்ல துறையிலா யினும் நம் செல்வர்கள் தமது பொருளை மனமுவந்து பயன்படுத்தக் கண்டதுண்டோ சொல்லுங்கள்!

மற்று, நமக்குப் புறம்பான மேல் நாட்டவர் கையிற் பொருள் சேர்ந்தால் அஃது எத்துணை நல்ல துறைகளிற் சென்று பயன்பட்டு, உலகத்திற் பரந்து விரிந்திருக்கும் எல்லா வகையினரான மக்களையும் இன்ப அறிவு வாழ்க்கையில் வாழச் செய்கின்றதென்பதைச் சிறிதுணர்ந்து பாருங்கள்!

மேல்நாட்டவர் ஒரே முழுமுதற் கடவுளை வணங்குவ தோடு, அவ்வொரு கடவுளை வணங்காமல் இறந்துபோன உயிர்களையும், மரங்கள், விலங்குகள், கட்டைகள், கற்கள் முதலானவைகளையும் அறியாமையால் வணங்கிப் பிழைபடும் ஏனத்தேய மக்களிடத்து இரக்கமுடையர்களாய்க், கோடி கோடியாகத் தமது பொருளைச் செலவுசெய்து, கல்வியறிவு ஆராய்ச்சியிற்சிறந்த தம் குருமார்களை நூறாயிரக்கணக்காய் அத்தேயங்களு க் கெல்லாம் அனுப்பி, ஆங்காங்குள்ள மக்களுக்குச் சமய அறிவையும் புகட்டி வருகின்றார்கள்.

இங்ஙனம் மேல்நாட்டவர் மற்றைக் கலையறிவுகளுடன் சமய அறிவிலுந் தாம் மேம்பட்டு விளங்குவ நாட்டவரும் அதிற் சிறந்து விளங்கவேண்டுமென்னும் பேரிரக்கமுடையவர்களாய், அதற்கென்று தமது பொருளைக் கணக்கில்லாமற் செலவு செய்து வருதல் போல, நம் நாட்டவர் தமக்கேனும் பிறர்க் கேனும் அங்ஙனஞ் செய்யக் கண்டதுண்டோ? நம் நாட்டி லுள்ள ஓரினத்தவர் தமது சமயக் கல்விக்கேனுந், தம்மோடு உடன் உறையும் மற்றை இனத்தவர் சமயக் கல்விக்கேனும் ஒரு காசாயினுஞ் செலவுசெய்யக் கண்டதுண்டோ? அதுமட்டுமா! ஒரு சில இனங்களைச் சேர்ந்தவர்கள் தாம் வணங்குங் கோயில்களில் தம்மோடு ஓர் ஊரில் ஒருங்கு உறையும் வேறுசில இனத்தவர்களை யுள்ளே நுழையவிடாமற், கிட்ட அணுகினால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/257&oldid=1584512" இலிருந்து மீள்விக்கப்பட்டது