உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் -17

எவராலும் மறுக்க முடியா. அவர்கள் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாம் இன்னார்க்குக் கல்வி கற்பிக்கலாகாது என்னும் வேற்றுமை சிறிதும் பாராதவர்களாய்க் கல்வியென்னும் நந்தாமணி விளக்கை எல்லார் கையிலுங், கொடுத்து அறியாமை என்னும் பேரிஞளைக் கடந்து அறிவுலகத்துக்குச் செல்லும் ஒப்புயர்வற்ற வழியைக் காட்டி வருகின்றார்கள் அல்லரோ? பார்ப்பனக் குடி வேளாளக் குடிகள் இருக்குமிடங்களிலே யன்றிப், பள்ளச் சேரி, பறைச் சேரிகளிலும் அவர்கள் நெடுகப் பள்ளிக்கூடங்கள் அமைத்துக் கல்வியை யூட்டி எல்லார்க்கும் அறிவுக் கண்ணைத் திறப்பித்து வருதல் எல்லாரும் அறிந்த தன்றோ?

இனி, நன்செய் புன்செய்ப் பயிர்களை விளைத்தற்குங் குளங்கூவல் கிணறுகள் வெட்டுதற்கும், வீடுகள் கட்டுதற்கும், ஆடுமாடுகள் மேய்த்தற்கும், இன்னுந் தமக்கு வேண்டிய எத்தனையோ வேலைகளெல்லாஞ் செய்வித்துக் கொள்ளு தற்கும் இவ்வேழைக் குடிமக்களைப் பயன்படுத்தி, அவ்வழியால் திரண் செல்வத்தை யடைந்து இனிது வாழும் நம் நாட்டு அரசர்களுங், குறுநில மன்னர்களும், மடாதிபதிகளுஞ் செல்வர்களுமோவென்றால் அவ்வேழைக்கு ஒருவேளை நல்லுணவாவது அவர்கள் உடுத்துக்கொள்ளுதற்கு ஓர் ஆறு முழத்துண்டாவது கொடுக்கின்றார்களா? இல்லை, இல்லை. அவர்கள் தமிழ் கற்பதற்கு ஒரு சிறு பள்ளிக்கூடமாவது வைத்து நடத்துகின்றார்களா? இல்லை, இல்லை. இதுமட்டுமோ!

அவ்வேழைகள் தம் மூர்த்தெருவழியேயுஞ் செல்லல் ஆகாது, தாம் புழங்குந் தண்ணீர்த் துறைகளிலுந் தண்ணீர் முகக்கல் ஆகாது, “நான் பெரியவன், அவன் தாழ்ந்தவன் எனக்கு முதலில் திருநீறு துளசி கொடுக்கவேண்டும், அவனுக்கு அப்புறங் கொடுக்கவேண்டும்” என்று தமக்குள்ளேயே தம் பெருமையைக் காட்டிக்கொள்ளத் தாம் செல்லுங் கோயிற் கோபுரவாயிலிலும் அவ் ஏழை மக்கள் அணுகுதல் ஆகாது என்று அவர்களைத் துரத்தி அடிக்கிறார்கள்.

ஏதொரு தீங்குஞ் செய்யாது, எல்லா வகையிலும் நலங்களே செய்து, தம்மையுந் தம்மவரையும் இனிது வாழவைக்கும் அவ்வெளிய மக்களுக்கு, மேற்குலத்தவராகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/259&oldid=1584514" இலிருந்து மீள்விக்கப்பட்டது