உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுப்புக்கு மறுப்பு

243

அவ்வறிவில்லா மக்கள் உள்ளத்தில் தம்மையுந் தம்முடைய நூல்களையுந் 'தேவர்' என்றுந் தேவர்க்குரிய 'வேதங்கள்' என்றும் நம்பும் அசையாக் குருட்டு நம்பிக்கையையும் பதியச் செய்து, அவற்றால் தம்முடை ஆட்சியையும் முதன்மையையும் ஆரியப்பார்ப்பனர்கள் எங்கும் நிலைநாட்டி விட்டார்கள்; இன்னும் அம்முயற்சியை நடத்தியே வருகின்றார்கள்;

ஆங்கில நன்மக்கள் ஆங்காங்கு வைத்து நடத்தும் பள்ளிக்கூடங்களிற் கற்கும் தமிழ் மாணவரின் தமிழ் பாடங் களிலெல்லாந் தம்முடைய புராணக் கட்டுக்கதைகளை நுழைத்து, இளமைப் பருவத்திலேயே அவை நம் சிறார் உள்ளத்திற் பசுமரத்தாணிபோற் இறுக்கமாகப் பதியவைக் கின்றார்கள்.

இவர்கள் இத்தமிழ்நாட்டை பாழ்படுத்தும் இவ்வுளவு களை, உயர்நிலைகளிலுள்ள தமிழறிஞர் நன்கறிந்து வைத்துந் தமக்கு வரும்பொருள் வருவாயையோ, தமது தமது நிலை உயர்வையோ மேலதாகக் கருதி, அவரிழைக்குந் தீங்குகட் கெல்லாந்தாமும் உடந்தையாய் நின்று நம் நம் அருமைச் சிறாரறிவைப்பாழாக்கி விடுகின்றனர்!

இன்னும் இங்ஙனமே பார்ப்பனர்களாலும், அவர்களைப் பின்பற்றி அவர்களைப்போல் நடக்கும் ஒழுகலாறுகள் உடையராய் வடமொழிக்கும் வடநூல்கட்கும் ஏற்றஞ் சொல்லித் தமிழையும் தமிழ் நூல்களையும் புறத்தொதுக்கி நடக்குஞ் சைவ வைணவர்களாலும் இந்நாட்டுக்கு விளைந் திருக்கின்ற தீமைகளையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இவ்வேடு இடங்கொள்ளாது.

ஆதலால், இந்நாட்டுக்கு நலந்தேடுபவராக வெளி வருந் தலைவர்கள் உண்மையாகவே தாம் நலஞ்செய்பவர்களா யிருந்தால், இப்போதுள்ள மிக இரங்கத்தக்க நிலைமையில் நம் குடிமக்களை, நம் ஆங்கில அரசுக்கு மாறாகக் கிளப்பிவிட்டு அவர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் பாழ்படுத்துஞ் செயலை விடுத்து, யாங்கூறும் நன் முயற்சிகளை விடாப் பிடியாய்ச் செய்து, அவர்களை ஆராய்ச்சியறிவிலும், பயன்படு முயற்சியிலும் முன்னேறுமாறு உதவி புரிதல்வெண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/268&oldid=1584523" இலிருந்து மீள்விக்கப்பட்டது