244
❖ LDMMLDMOшLD -17 →
முதலாவதாக, ஊர்கடோறுந் தமிழ் பள்ளிக்கூடங்கள் திறப்பித்துச், செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகளைத் தவிர மற்றை எல்லாப்பிள்ளைகளும் பொருட் செலவின்றித் தனித்தமிழ் கற்கும்படி செய்தல் வேண்டும். அவர்கட்குக் கற்பிக்கும் நூல்களில் ஆரியக் கட்டுக்கதைகள் சிறிதும் விரவல் ஆகாது.
ஒழுக்க முறைகளும், இயற்கைப்பொருள் இயல்புகளும், சிற்றுயிர்களின் தன்மைகளும், ஆண்மையிற் சிறந்தாரின் வரலாறுகளும், மக்களின் நாகரீக வரலாறுகளும், உழவு வாணிகம் கைத்தொழில்கள் செய்யும் முறைகளும், கடவுளைக் கண்டு பாடிய சான்றோர் வரலாறுகளும், உண்மையாராயும் முறைகளும் இன்னும் வைபோன்றவைகளுமே அந்தந்த வகுப்புக்குத்தக்கபடி செந்தமிழில் எழுதப்படல் வேண்டும்.
இரண்டாவது: தமிழ்கற்ற அறிஞர்களை ஆராய்ச்சி முறையிற் பயிற்றி ஊர்கடோறும் விடுத்துப், பொதுமக்கட்கு மேற்கூறிய பொருள்களை விளங்க எடுத்துச் சொல்லி, அவர்கள் நல்லறிவு பெறுமாறு செய்வித்தல் வேண்டும். ஊனுணவு ஒழித்தவர், ஊனுணவு ஒழியாதவர் என்னும் இருபிரிவினரன்றி, வேறு எவ்வகைச் சாதிப்பிரிவுஞ் சமயப்பிரிவும் இல்லாமல் ஒழித்தல் வேண்டும்.
பிறப்பு இறப்பு இல்லா ல்லா எல்லாம் வல்ல ஒரு முழு முதற்கடவுளையே எல்லாரும் வணங்கும்படி செய்வித்தல் வேண்டும். பிறந்து இறந்த உயிர்களைத் தெய்வங்களாக வணங்குஞ் சிறு தேவதை வணக்கத்தையும், அவைகளுக்கு இடும் உயிர்ப் பலியையும் அறவே ஒழித்தல் வேண்டும்.
L
மூன்றாவது: மேற்குறித்த நன்முயற்சிகளைச் செய்து
அவற்றால் விளையும் நலங்களை நிலைபெறுத்துதற்கு ஏராளமான பொருள் வேண்டியிருக்குமாதலால், வீணே கோடி கோடியான பொருட்டிரளை வைத்துக்கொண்டு அவற்றை மேற்குறித்த நன்முயற்சிகளுக்குப் பயன்படுத்தாமல் இறுமாந்து கிடக்குஞ் சிற்றரசர்களும், மடத்தலைவர்களும் அப்பெரும் பொருட்டிரளில் ஒரு சிறு பகுதியை மட்டுந் தமக்கு எடுத்துக் கொண்டு, மற்றைப் பெரும் பகுதியைக் குறிப்பிட்ட முயற்சி களுக்குக் கொடுத்துவிடுமாறு, எந்தெந்த வகையில் முயலல்
6