இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
மறைமலையம் 17
அமைந்திருக்கின்றன. மேலும், இவற்றிலுள்ள பொருள்களும் எல்லார்க்கும் விளங்குவனவாய், அவர்க்கு மேலுமேலும் அறிவை வளர்க்கும் இயற்கை வாய்ந்து மிருக்கின்றன. யாம் எழுதிய மற்றை நூல்களிற் பெரும்பாலான சிறிதேனுங் கல்வியறிவு பெற்றவர்களுக்கே பயன்படுவனவா யிருக்க இந்நூற் கட்டுரைகள் மட்டும் எல்லார்க்கும் பயன்படும் இயல்பு கண்டு எமக்கு நண்பராய் உள்ளார் பலரும் இவற்றை யெல்லாம் ஒருங்கு திரட்டி ஒரு நூலாக வெளியிடல் வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற் கிணங்கி, அவற்றை இங்ஙனம்
வெளியிடலானேன்.
சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம்,
1843
இங்ஙனம் வேதாசலம்