உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் 17

சமய

கட வுளை நம்பத் தலைப்பட்டிருக் கின்றார்கள். கடவுளிடத்தில் நம்பிக்கையில்லாத அருகரும், பெளத்தருங் கூடத் தமக்கு மேற்பட்ட துணையை நாடினவர்களாய்த் தம் குரவரையே கடவுளாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். தம்மையே கடவுளாக நினைப்பவர்களுங் கூடத் தமது காள்கையை உண்மைப்படுத்திக் கொள்ள முடியாமை கண்டு ஏதாவ தொன்றைத் தமக்கு மேற்பட்டதாக வைத்து வணங்கி வருகின்றார்கள். இங்ஙனமாக ஒன்றோடொன்று மாறுபட்ட காள்கைகள் உடையவர்களெல்லாருங் கடை சியாகக் கைக்கொண்டது 'தமக்கு மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருள் வணக்கமே’ ஆகும். இம் முடிந்த கொள்கையில் எல்லாச் சமயிகளும் உடன்பாடு உடையவராய் இருக்கின்றனர்.

இனி, மக்கள் எல்லாரும் இங்ஙனந் தம்மின் மேற்பட்ட ஒரு பேரறிவுப் பொருளின் உதவியை விரும்பி நிற்றல் எதன் பொருட்டு என்று ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், அவர் தமது துன்பத்தை நீக்கிக் கொள்ளுதற்கும் இன்பத்தைப் பெறுவதற்குமேயாம் என்னும் உண்மை புலனாகும். மக்கள் மட்டுமே யல்லர், மக்களினுந் தாழ்ந்த எல்லா உயிர்களுங் கூடத் தமது துன்பத்தைப் போக்கி இன்பத்தை ஆக்கிக் கொள்ளவே முயன்று நிற்கின்றன. இங்ஙனம் நம் கண்ணெதிரே காணப்படுகின்ற இவ்வுண்மையைக் கொண்டு, எல்லா உயிர்களும் இப்போது துன்பக் கயிற்றாற் கட்டப்பட்டிருக் கின்றன வென்றும், இத் துன்பக் கயிற்றை அறுக்கவும் இன்ப வெள்ளத்தைப் பெருக்கவுந் தம்மால் ஆகாமையின், துன்பத்தி னின்றுந் தம்மை விடுவித்து இன்பத்தை ஊட்டவல்ல முழுமுதற் கடவுளின் உதவியைப் பெறுதற்கு அவை பெரிதும் விரும்பி நிற்கின்றன வென்றும் நாம் தெளிவாக அறிந்து கொள்கின்றனம் அல்லமோ?

இன்னும், பிறப்புப் இறப்பு நோய் மூப்புக் கவலை இழப்பு முதலான பலதிறப்பட்ட வடிவங்களிற் றோன்றுந் துன்பங்கள் அத்தனையும் எல்லா உயிர்களையும் வருத்தி வரக் காண்கின்றோ மாதலால், இத் துன்பங்கள் உடையோர் வேறுவகையில் எவ்வளவு உயர்ந்தோராயினும் உயிர்களே யல்லாமற் கடவுளாக மாட்டார். இவ்வுயிர்களை இத்துன்பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/39&oldid=1584239" இலிருந்து மீள்விக்கப்பட்டது