உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

15

னின்றும் மீட்டு, இவற்றிற்கு இன்பத்தைத் தருங் கடவுள் ஒருவரே எவ்வகைத் துன்பமும் இல்லாதவர், எல்லா இன்பமும் ஒருங்கே உடையவர். இதுவே கடவுளுக்கு உண்மையான தன்மை யென்பதை எல்லாச் சமயிகளும் உடன்பட்டு உரைப்பார் களாயினுஞ், சைவ சமயத்தில் க மட்டும் அவ்வுண்மை முன்னுக்குப்பின் மாறில்லாமற் காணப்படு கின்றது; மற்றைச் சமயத்தவர்களோ பிறப்புப் இறப்பு முதலான மேற்கூறிய துன்பங்களிற் கிடந்து உழன்றவர்களை, அவரவரிடத்துள்ள சிற்சில சிறந்த தன்மைகளைக் கண்டும் வலிய செய்கைகளைக் கண்டும் முழுமுதற் கடவுளாகத் துணிந்து வணங்கி வரு கின்றனர். நாடக அரங்கத்தில அரசந்தாங்கி வந்து ஆடுவோன் உண்மையில் அரசன் ஆகாமைபோல, இறைவனருளாற் சிற்சில உயர்நலச் செய்கைகளைப் பெற்றவர்கள் அவற்றால் அவ்விறைவனைப்போற் கருதப்படினும் அவர் உண்மையில் அவ்விறைவனாகமாட்டார். சைவசமயிகள், வணங்கிவருவது, இன்பவடிவான கடவுளே யல்லாமற் பிற உயிர்களுள் ஒன்றும் அன்றென்பதற்கு அடையாளம் என்னென்றால், அன்பு அல்லது இன்பம் என்று பொருள்படுஞ் சிவம் என்னுஞ் சொல்லையே முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்குவதும், அச் சிவத்திற்கு இறப்புப் பிறப்பு முதலான எவ்வகைத் துன்பமுஞ் சிவபுராணங்களிற் காணப்படாமையுமே யாம். இவ்வுண்மையை வலியுறுத்தும் பொருட்டே,

“யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றுஅத் தெய்வங்கள், வேதனைப்படும் இறக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும்; ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வதன்றே

என்பது சிவஞானசித்தியாரிலும் அருளிச் செய்யப்பட்டது.

இங்ஙனம் இன்பவடிவாக விளங்கும் முதல்வனையே வணங்குஞ் சைவசமயிகள் எவ்வுயிர்க்கும் இன்பத்தை செய்யக் கடமைப்பட்டவர்களா யிருத்தலால், இன்பத்திற்கு மாறான துன்பத்தைத் தருங் கொலைத்தொழிலை எவ்வுயிர் களிடத்துஞ் செய்யாதவர்களாயும், அக்கொலைத் தொழிலால் வரும் ஊனைத் தின்னாதவர்களாயுஞ் சீவாருணிய ஒழுக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/40&oldid=1584240" இலிருந்து மீள்விக்கப்பட்டது