உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

5. சீவகாருணியம்

'கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற்

குத்திரங் கோள்களவு

கல்லாமற் கைதவரோ டிணங்காமல் கனவிலும் பொய்

சொல்லாமற் சொற்களைக் கேளாமற்

றோகையர் மாயையிலே

செல்லாமற் செல்வந் தருவாய்

சிதம்பர தேசிகனே”

"சீவகாருணியம் என்பது இரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும். இதனைப் பிரித்தால் சீவ என்றுங் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும். சீவர்கள் என்பன யாவையோவென்றால் தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடைய புல் மரஞ்செடி கொடி முதலியனவும், தொட்டால் அறிவதோடு நாவினாற் சுவைக்கும் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர்களான நந்தை சங்கு கிளிஞ்சில் முதலியனவுந் தொட்டறிந்து நாவாற் சுவைத்தலொடு மூக்கால் நாற்றத்தையுணரும் மூன்றறிவுயிர்களான கறையான் எறும்பு ஈசல் முதலியனவுந், தொடுதலுஞ் சுவைத்தலும் முகருதலும் என்னும் உணர்வுகளோடு கண்ணாற் காணும் அறிவுமுடைய நான்கறிவுயிர்களான நண்டுந் தும்பியும் வண்டுந் தேனீயும் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான்கு உணர்வுகளொடு காதாற்கேட்டுணரும் அறிவும் ஐந்தறிவுயிர்களான விலங்குகள் பறவைகள் காட்டு மிராண்டிகள் முதலியனவுந், தொடுதல் சுவைத்தல் முகருதல் காண் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளோடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடைய ஆறறிவுயிர்களான

காண்டல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/59&oldid=1584262" இலிருந்து மீள்விக்கப்பட்டது