உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் -17

அறிய அப்பொருள்களின் வடிவத்தோடு ஒத்த உருவம் அதன் அறிவின்கண் விளைதலின் அதுவே அதன் அறிவு விளங்கும் நிலையென்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும்.

UI

எனவே, அறிவில் உருவங்கள் தோன்றாதிருக்கும் வரையில் அவ்வறிவு மழுங்கிக் கிடக்குமென்பதும், அவ்வுருவங்கள் தோன்றத் தோன்ற அவ்வறிவு மிகுதியும் விளக்கமுடை தாமென்பதும் இது கொண்டு அறியற்பாலனவாம். எவனுடைய அறிவு திருத்தமான உருவங்கள் மிகுதியும் உடையதாகின்றதோ அதுவே மிகச் சிறந்த அறிவாய்த் திகழ்கின்றது. ஆதலால் அறிவும் ஓர் ஒழுங்குபட்ட உருவமுடையதாய்த் திகழத் திகழ அது மிகவுஞ் சிறப்பெய்துகின்றது.

இங்ஙனமாக அறிவில்லாப் பொருளும் அறிவுள்ள உயிரோடு கூடிய உடம்பும், மக்கள் அறிவும் ஓர் உருவுடையன ஆக ஆக நிரம்பவுந் திருத்தமுற்றுப் பயன்படுதலும் விளக்கமெய்துதலும் நமது பழக்கத்தில் மறுக்கப்படாத உண்மையாய் இனிது அறியப்படுதலின், உருவம் பெற்றிருத்தல் குற்றமாமென்று கூறுவது பொருந்தாவுரையாம்.

அறிவுப் பொருளிலும் அறிவில்லாப் பொருளிலுங் காணப்படும் உருவங்களே குற்றமில்லாதனவாய்ப் பயன் மிக உடையனவாய் விளங்குமாயிற், பேரறிவு பொருளாய் எல்லாம் வல்லவராய் உள்ள கடவுளிடத்தே காணப்படும் உருவங் குற்றமுடையதாகுமோ? நன்கு ஆராய்ந்து பாருங்கள்

அன்பர்களே!

இனி, அறிவில்லாப் பொருள்களிற் காணப்படும் உருவங் களைக் காட்டினும் அறிவுள்ள உயிரொடு சேர்ந்த உடம்புகளிற் காணப்படும் உருவங்கள் சிறந்தனவாய் இருத்தல் போலவும், உடம்புகளிற் காணப்படும் உருவங்களைக் காட்டினும் உயிர்களின் அறிவிற் காணப்படும் உருவங்கள் மிகச் சிறந்தன வாய் இருத்தல் போலவும் பேரறிவுப் பிழம்பான இறைவனிடத்தே காணப்படும் உருவங்கள் மிகமிகச் சிறந்தனவாய் இருக்கு மென்பதை யாம் உரைத்தலும் வேண்டுமோ?

அங்ஙனமாயின் உருவுடைப் பொருள்கள் எல்லாஞ் சில காலத்துள் அழிந்து போதலைக் காண்கின்றோமாகலின் அது போல் உருவுடைய கடவுளும் அழிவாரென்பது பெறப்படுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/67&oldid=1584273" இலிருந்து மீள்விக்கப்பட்டது