உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

9. பகுத்துணர்வும் மாதரும்

மாதர்களுடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் நாடி, அவர்களுக்கு முதன்மையாக வேண்டுஞ் சில சிறந்த பொருள் களை இங்கே சிறிது விளக்கிச் சொல்வாம்.

நமது தமிழ்நாட்டைத் தவிர, மற்ற நாடுகளிலிருக்கும் பெண்மணிகள் கல்வியிலும் கடவுள் வணக்கத்திலும் நாகரிக ஒழுக்கத்திலும் நாளுக்கு நாட் பிறைபோல் வளர்ந்து மிகவும் இனிதாக உயிர் வாழ்கின்றார்கள். நமது தமிழ்நாட்டு மாதர்களோ சிறந்த கல்வி உடையவர்களும் அல்லர்; உண்மையான கடவுளை வணங்கத் தெரிந்தவர்களும் அல்லர்; வேறு எவ்வகையான நாகரிகத்தில் உயர்ந்தவர்களும் அல்லர். உண்ண உணவும், உடுக்கத் துணியும், இருக்க இடமும் கிடைத்தாற்போதும் என்றும், இவைகளுக்கு வறுமைப்படாமல் வாழ்வதே இன்ப வாழ்க்கை என்றும் நினைத்து, உணவு, உடை, இருப்பிடம் என்னும் இவைகளைத் தேடிக்கொள்வதிலும், தேடிய இவற்றை உண்டு உடுத்து உறைவிடமாக்கி உறங்கிக் கழிவதிலுந் தம் வாழ்நாளைக் கடத்தி வருகின்றார்கள்.

உயர்ந்த அறிவாவது உயர்ந்த நோக்கமாவது நம் பெண் மக்களுக்குச் சிறிதும் இல்லை. அல்லது உயர்ந்த அறிவையும் நோக்கத்தையும் பெறல் வேண்டுமென்னும் விருப்பமாவது இவர்களுக்கு இருக்கின்றதோவென்றால், அது தானும் இல்லை. உண்டு உடுத்து உறங்கி வாழ்நாட் கழிப்பதை விட மக்களால் அடையத்தக்க வேறு சிறந்த பொருள் இல்லையென்றே பெரும்பாலார் நினைக்கின்றார்கள்.

அப்படி நினைத்தால் மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் வேற்றுமை யாது? மக்களினுந் தாழ்ந்த ஆடு மாடு குதிரை முதல் ஈ எறும்பு புழு ஈறான எல்லாச் சிற்றுயிர்களுங்கூடப் பசியெடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/88&oldid=1584294" இலிருந்து மீள்விக்கப்பட்டது