உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுரைக்கொத்து

69

தொலைவிலுள்ள மற்றோர் ஊருக்குச் செல்வதில்லை. முழு வறுமையாற் பசித்துன்பந் தாங்க மாட்டாதவர்களே தாம் இருந்த ஊரைவிட்டு, வேறு வளஞ்சிறந்த ஊர்களைத் தேடிச் சென்றனர். மற்றையோர் தாந்தாம் இருந்த இடங்களிலேயே தத்தமக்கு வேண்டிய உணவுப்பண்டங்களைப் பயிர் செய்து கொண்டு பெரும்பாலும் வறுமையிலேயே காலங்கழித்தனர்.

அக்காலத்தில், ஓர் ஊரில் உண்டாக்கப்பட்ட பண்டங்கள். பிறிதொரு சிறிய ஊர்க்குச் செல்வதில்லை. காவிரிப் பூம்பட்டினம், உறையூர், மதுரை, கரூர் முதலான பெரிய தலைநகர்கள் சிற்சிலவற்றிற்கே அயலூர்களில் ஆக்கின பண்டங்கள் விலைப் படுத்த வரும். நிரம்பப் பாடுபட்டு அப்பண்டங்களை அந்நகரங் களிற் கொண்டு போய்ச் சேர்ப்பிக்க வேண்டியிருத்தலால், வாணிகர்கள் அவைகளை மிகுந்த விலைக்கு விற்றனர். கடல் தாண்டியுள்ள நாடுகளில் ஆக்கின அரும்பண்டங்கள் கப்பல் களின் வழியாக வர வேண்டியிருந்தமை யாலும், அக்காலத்துப் பாய்கட்டிக்கப்பல்கள் கடலிலுள்ள சூழல்களுக்கும் அங்கேவீசுஞ் சூறைக் காற்றுகளுக்குந் தப்பிப் பிழைத்துச் சென்று அயல் நாடுகளிற் கிடைத்த அவ் அரும்பண்டங்களை ஏற்றிக் கொண்டு திரும்பி இங்கு வந்து சேரப் பல திங்களும் பல ஆண்டுகளும் கடந்து போனமையாலும் அவ் அரும்பண்டங்களை மிக உயர்ந்த விலைக்கு விற்பனை செய்தார்கள். அதனால் மிகச் சிறந்த செல்வர்களாய் உள்ளவர்களே அவ்வுயர்ந்த பண்டங்களை வாங்கத் தக்கவராய் இருந்தார்கள். மற்றவர்களெல்லாரும் அவைகளை வாங்குதற்கு ஏலாமல் அவற்றைப் பார்த்துப் பார்த்து ஏமாந்தனர்.

இவைகளேயன்றி, அக்காலத்தில் இன்னும் ஒரு பேரிடர் இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழை பெய்ய வேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் மறுத்துவிட்டால், அவ்வூர் களின் விளைபொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊர்களிலுள்ள உணவுப் பொருள் களை விளையாத ஊர்களுக்கு விரைவிற் கொண்டுபோய்ச் சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை; அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர்களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/94&oldid=1584300" இலிருந்து மீள்விக்கப்பட்டது