உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 17.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கொத்து

73

ம்

பழைய நாட்களில் ஓர் ஊரிற் சிற்சிலரே கற்றவராய் இருப்பர். அவர்கள் தாம் கற்கும் நூல்களைப் பனையேடுகளிற் பாடுபட்டு எழுதிக் கருத்தாய் வைத்திருப்பர். அவர்கள் தம்மிடம் கல்வி கற்க வரும் மாணாக்கர் சிலர் மட்டுந் தம்மிடத்துள்ள ஏட்டுச் சுவடிகளைப் பார்த்துச் சிறிது சிறிதாய் எழுதிக் கொள்ளும்படி அவர்களுக்குக் கொடுப்பார்களே யல்லாமல் எல்லாரும் பெற்றுப் பயிலும்படி அவ்வேட்டுச் சுவடிகளை எல்லார்க்கும் எளிதிற் கொடார். அல்லது அப்படிக் கொடுத்தாலுங்கூட ஓர் ஏட்டுச் சுவடியில் எழுதப்பட்டிருக்கும் ரு நூலை ஒரே காலத்திற் பற்பலர் எப்படி எடுத்துக் கற்க முடியும்?

மேலுந் தமிழ் மொழியில் உள்ள சிறந்த நூல்கள் பலவும் ஓர் ஊரில் உள்ள கற்றவர் சிலரிடத்தில் ஒருங்கே காணப்படுவதும் இல்லை. ஓர் அருமையான நூலைக் காண வேண்டுமானால் எத்தனையோ ஊர்களுக்குப் போய் அலைந்து திரிந்து தேடிப் பார்க்க வேண்டும். இப்படித் தேடித் திரிவதற்கு எவ்வளவு நாட்கள் செல்லும்? எவ்வளவு பொருள் செலவாகும்? எவ்வளவு பாடும் உழைப்பும் வேண்டும்? இத்தனை இடர்ப்பாடுகள் இருந்தமை யினாலேயே பழைய காலத்திற் மிகுதியாயில்லை; கல்வி பரவவும் இல்லை.

கற்றவர்

தாகை

ஆனால், இக்காலத்திலோ வெள்ளைக்காரர் கண்டுபிடித்த அச்சுப் பொறிகளின் உதவியாற் பல்வேறு நூல்களும் பல்வேறு புதினத் தாள்களும் ஒவ்வொரு நொடியுங் கோடி கோடியாக அச்சிற் பதிக்கப்பட்டு உலகமெங்கும் பரவிக் கொண்டிருக் கின்றன. இதனால் எவ்வளவு ஏழையாயிருப்பவர்களுஞ் சிறிது பொருள் செலவு செய்து தமக்கு வேண்டிய நூல்களை எளிதில் வாங்கிக் கற்றுக் கல்வியில் தேர்ச்சி பெறுகின்றார்கள். இதனாற் கல்வி யானது எங்கும் பரவுகின்றது. கற்றவர் தொகை மிகுதிப்படுகின்றது; நாகரிகம் எங்கும் அறிவு மணம் கமழ்ந்து இன்ப ஒளி வீசுகின்றது. இத்தனை பெரும்பேறுகளும் காக்ஸ்டன் என்னும் வெள்ளைக்கார அறிஞர் தமது பகுத்துணர்வினைப் பயன்படுத்தி அச்சுப்பொறியைக் கண்டுபிடித்தமையால் விளைந்தவைகள் அல்லவோ?

இன்னும் இங்ஙனமே வெள்ளைக்காரத் துரைமக்கள் அல்லும் பகலுந் தமது அறிவைச் செலுத்தி இதுகாறுங் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_17.pdf/98&oldid=1584304" இலிருந்து மீள்விக்கப்பட்டது