உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் -18

தாகுத்தலின் கண்ணே நிலைபேறு மிகவுடையராய் மொழியாராச்சியிற் சோம்பலுற்று உறங்கிக் கழிக்கின்றார். இனி இங்ஙனம் ஒழிவாரொழியத் தமிழ்ப்பற்று மிக்குடைய தமிழ்ப் புலவர் ஒரு சிலரும். ஆங்கிலமுந் தமிழும் வல்லார் ஒருசிலரும் மனவெழுச்சியான் முன்வந்து நின்று உண்மை யாராய்ச்சி செய்து போதருகின்றமையின், அந்நல்லார் வழி நின்று யாமும் எம்மாராய்ச்சியிற் கண்டவற்றை விளங்கக் காட்டத் துணிந்து இன்றிதனை விரித்துரைப்பப் புகுந்தாம். இது நிற்க.

னி

ஒரு

இனி மேலே காட்டிய பண்டை மொழிகளான தமிழ் முதலான சொற்களுள் இன்று காறும் பரவைவழக்கமாய் வருவது தமிழ் ஒன்றேயாம். அற்றன்று, இலத்தீன் முதலான சொற்களும் ஆண்டாண்டுப் பயிற்சி செய்யப்படுதலும், கற்றறிவுடையோராற் பேசப்படுதலுமுடையனவாய் வருதலின் அவை வழக்கு வீழ்ந்தனவாகா வெனின்; நன்று சொன்னாய், சொற் பரவை வழக்குடையதோ அன்றோவெனத் துணிவு காண்டல் அவ்வாறன்று. மற்று அது கற்றறிவிலாச் சிறுமகா ரானும் பெண்டிரானும் ஆடவரானும் இல்லந்தோறும் உரை வழக்குற்றுப் பெருகி நடைபெறுதலொன்றானே அவ்வாறாதல் இனிது துணியப்படுமென்பது. இனி இலத்தீன் முதலிய சாற்கள் அங்ஙன மில்லந்தோறுஞ் சிறுமகாரானும் பிறரானும் வழங்கப்படுதல் காணாமையானும் தமிழோ அவ் வாறின்றி யாண்டும் பெருகிய வழக்காய்த் தென்றமிழ் நாட்டகத்தே நடைபெறுதலானும் அவ்விலத்தீன் முதலான சொற்கள் உலக வழக்கு வீழ்ந்தனவா மென்பதூஉம் தமிழொன்றே உலக வழக்குடையதா மென்பதூஉந் தேற்றமாம். எனவே, தமிழ்மொழிப் பயிற்சி செய்தல் அவ்விலத்தீன் முதலான ஏனைமொழிப் பயிற்சியினும் பயப்பாடு பெரிதுடையதா மென்பது இனிது விளங்கலின் இப்பெற்றி யறியாத சென்னைப் பல்கலைக் கழகத்தார் தமிழ்ப் பயிற்சி செய்தலை அறவே களைந்துவிடல் வேண்டுமென்றுரைத்த வுரை பெரியதோர் இழுக்குமாம் ஏதமுமாம். இது கிடக்க.

இனி அத்தமிழ்மொழி, வடமொழி, இலத்தீன் முதலான மற்றவ்வெல்லாச் சொற்களினும் முற்பட்டுத் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/288&oldid=1585549" இலிருந்து மீள்விக்கப்பட்டது