உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

258

  • மறைமலையம் -18

ரான் முதன் முதல் மொழியப்படும்

ஒலி லி

நூலார் மெல்லெழுத்தென்

யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந்தாயைக் கூவும் வழி அடுத்தடுத்து மா மா என்று சொல்லுதலானே அம்மா என்னுஞ் சொல் தோன்றுவதாயிற்று. இனி அவர் அம்மா எனும் அச்சொற் கற்ற துணையானே, தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்கு மாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத் தலானே அப்பா எனுஞ் சொல் வெளிப்படலாயிற்று. இங்ஙனம் மெல்லென் றொலிக்கும் ஒலி நுட்பம் பற்றி மகரத்தையும் அதனோ டோரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் றவ்வாறோ துவாராயினார்; வல்லென் றொலிக்கும் வகை பற்றிப் பகரத்தையும் அதனோடோரினப் பட்ட எழுத்துக் களையும் வல்லெழுத் தென்று அவ்வாறோதி னார். இங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் மெய் ஒலி யெழுத்துக்கள் மகரமும் பகரமுமாதல் பற்றியே, உலகத்தின்கட் பரந்த வேறு வேறு வழங்கப்படும் மொழிக ளெல்லாம் தாய் தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா, அப்பா எனுமிரண்டேயாயின. உலகவியற்கைத் திறம் பற்றி மொழியப் படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேற மாட்டாத வடநூல் வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா வென்னும் வடமொழிகளின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வழக்கமுறு கின்றனவென்றுரைத்து ஏதம்படுகின்றார். இது கிடக்க.

இனி மேலே காட்டிய ட், ண் முதலிய எட்டு மெய்யெழுத்துக்களும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நா வெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற் பொருட்டு வேண்டப்படு முயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவா றியக்கப்படுங் காலத்தே வருவதொன்றாம். இதழ் நாப் பல்லணத் தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப் பருவத்தே யரிது முயலமாட்டா தெளிது செல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சி யெல்லாம் எளிது செல்லா நிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றங் காண்டலரிதினும் அரிதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/290&oldid=1585552" இலிருந்து மீள்விக்கப்பட்டது