உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

259

யாமொருநாள் மூன்று அகவை செல்லாநின்ற ஒரு பிள்ளை ஏனைச் சிறுமகார் சிறுமகார் சிலரோ டொருங்கு விளையாடிக் காண்டிருத்தலை உற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய சிறுவனை ‘ஆம்' ‘ஆம’ என்றழையா நின்றது. அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி அதன்கண் உருவி நுழைந் தாராய்வான் புகுந்தன. அங்ஙனம் ஆராய்ச்சி நிகழ்ந்த காலத்திலேதான் சிறுமகார்பால் நாவினாற் பிறக்குஞ் சொற் காண்டல் அரிதென்பதெமக்கினிது விளங்கிற்று. னி நாவினாற் பிறக்கும் ஒலிகொண்டு தமிழ்ச் சொற்கள் தொடங் காமை என்னை யென்னும் ஐயப்பாட்டினை ஈண்டாராய லுறின், தமிழ்மொழி தோற்றமுற்ற பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் உறுப்புக்கள் உரமேறியரிது முயற்சி செல்லாத இளம்பருவத்தே சொற்சொல்லுந் திறமை யறிதலுறுவா ராயினாரென்பதூஉம் அப்பருவத்தே முற்பட்டுத் தேற்றமுற்ற மொழி தமிழே யாமென்பதூ உம் நன்றுணரக் கிடக்கின்றன. இனி, வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான மொழிகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத் துக்கள் முதற்கொண்டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழிகளெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவாறு இயக்கும் பிற்பருவத்தே தோற்ற முற்றெழுந்த இயல்பினவாதல் வெள்ளிடைமலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் மொழிகளும் தோற்றமுற்றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி இனிது விளங்கலின் தமிழ் ஏனை எல்லா மொழிகளிலும் பழைமை தாமென நிறுவுதற்கு யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் வாய்ப்புடைய தாமாறு காண்க.

L

அற்றேலஃதாக, ட்,ண் முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்கள் தமிழ்மொழியிற் காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமா லெனின்:- அறியாது கடாயினாய்; தமிழ் வழங்கு மக்கள் உறுப்புரமேறிய பிற்காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்களை மொழியிடைப் படுத்து வழங்கக் காண்டலின் அஃதிழுக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/291&oldid=1585553" இலிருந்து மீள்விக்கப்பட்டது