* பின்னிணைப்பு
285
2. சமய, மொழி, இன, நிற, நாடு வேற்றுமை பாராமை.
3. 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (திருமூலர்) என்ற கருத்தை நடைமுறையிற் கடைப்பிடித்தல்.
4. இக்கருத்திற்கு முரணில்லாமல் தமிழின, நாடு, மொழி, பண்பாடு, கலை, நாகரிகங்களைப் போற்றுதல் சிறப்பு முறையாகும்.
5. பாரதநாடு, இன, சமய ஒருமைகளைக் கடைப்பிடித்தல் பொது முறையாகும்.
6. கலப்பு மணம்
7. மாதர் மறுமணம்
8. காதல் மணம்
9. கைமை மணம்
10. குடும்பக் கட்டுப்பாடும்
11.
இச்சீர்திருத்தங்களால்
சமய
ஒழுக்கங்களும்
ஊனுண்ணாமை முதலிய உண்மை அறவொழுக்கங்களும் அணுவளவும் கைவிடப்படலாகாது.
இவைகளைத் தூய முறையில் கைக்கோடல்.
மொழிக் கருத்துக்கள்
1. தனித்தமிழ் போற்றுதல்
2. தமிழ் வாயிலாகவே தமிழர் அனைத்துக் கலைகளையும் கற்றல்.
3. தமிழர்தம் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழையே பயன்படுத்துதல்.
4. நினைவு, பேச்சு, எழுத்துக்களில் தனித்தமிழையே பேணல்.
—
5. தமிழ் நாட்டின் அரசு, அறமன்றங்கள், கல்வி நிலையங்கள் யாவும் தமிழிலேயே தனித் தமிழிலேயே நடைபெறல் வேண்டும்.