உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

சிறு

மறைமலையம் 19

ம்

பதினேழாம் ஆண்டிற் சவுந்தரவல்லி எனப் பெயரிய நங்கையார் இவர்க்கு மனைவியாராக மணம் பொருத்தப் பட்டார். பதினெட்டாம் ஆண்டிற் 'சிந்தாமணி' எனப் பெயரிய ஒருபெண் மகவும் இவர்க்குப் பிறந்தது. இவர் பிள்ளையாயிருந்த காலத்திலேயே தந்தையை இழந்தமையின், தம் அன்னையின் பாதுகாவலிலேயே இருந்து கல்வி பயின்றனர். கல்லூரியின் ஆசிரியர்களும் இவரோடு உடன்பயின்ற மாணக்கர்களும் வர்தங் கல்வியறிவின் திறத்தையுங் கூரிய அறிவையுங் கண்டு மிக வியந்து இவர்பால் மிக்க அன்பு பாராட்டினர். அஞ்ஞான்று காரைக்காலில் நடைபெற்ற ‘திராவிட மந்திரி' என்னுங் கிழமைத் தாளுக்கு இவர் முதன்முதற் செந்தமிழ்க் கட்டுரைகள் எழுதி வந்தனர். அதன்பின் நாகபட்டினத்திலேயே நடைபெற்ற 'நாகை நீலலோ சனி' என்னுங் கிழமைத்தாளுக்குப் பலப்பல கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் தமக்கு முதன் மகள் பிறந்தபின், குடும்பச் சுமையைத் தம் அன்னையார் மேல் வைத்தல் இனி ஆகாதெனக் கண்டு, 1894 ஆம் ஆங்கிலக் கல்லூரிப் பயிற்சியைவிட்டு விலகி, ஓர் அலுவலிற் புகுதற்கு முயன்றார்.

அக்காலத்தில் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் அறிவு நூலாசிரியராயிருந்த திருச் சுந்தரம்பிள்ளையவர்கள் எம். ஏ. இயற்றிய 'மனோன்மணீயம்' என்னும் நாடகக் காப்பியத்தைத் தாம் பார்க்க நேர்ந்ததிலிருந்து, தம் இயற்றமி ழாசிரியராகிய திரு. நாராணசாமிப் பிள்ளையவர்களிடஞ் ஞ் சுந்தரம் பிள்ளையவர்கள் இளந்தைப் பொழுதில் தமிழ்க் கல்வி பயின்றவர்களென்பது தெரிந்து, அவர் கட்குத் தம்மைப் பற்றியுந் தம் ஆசிரியரைப் பற்றியும் அகவற்பாவில் ஒரு கடிதம் வரைந்து விடுத்தார். அதனைக் கண்டு இறும்பூதுற்ற சுந்தரம் பிள்ளையவர்கள் ஆசிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர் களையும் மறைமலையடிகளையுந் திருவனந்தபுரத்திற்குத் தம்பால் வரும் படி விரும்பி அழைத்து ஒரு கடிதம் போக்கினர். அவ்வழைப்பினுக்கு மிக மனங்களித்துத் தம் ஆசிரியரும் இருவருமாக 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைக் கிழமையில் திருவனந்தபுரத்திற்குச் சென்று சுந்தரம் பிள்ளையவர்களைக் கண்டார். இவர் அகவற் பாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/105&oldid=1585696" இலிருந்து மீள்விக்கப்பட்டது