உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

97

சைவ மடத்தின் தலைவர்கள், அரசர்க்குள்ள பாருள்களிலும் மிகுதியான பொருள்களை வைத்துக் காண்டு பாவமான பல துறைகளிலும் அவற்றைப் பாழ்படுத்தி வருகின்றார்கள்.

சைவசித்தாந்தமுந் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களோ தமது வாழ்க்கைக்கு வேண்டும் செலவுக்குத் தக்க வருவாய் இன்றிப் பெரிதுந் துன்புறுகின்றார்கள். இவ் அறிஞர்கள் மி மிக டர்ப்பட்டு எழுதி வெளியிடும் நூல்களின் செலவுக்குக் கூடப் பொருளுதவி செய்வார் எவரும் இல்லாமையின் அவர்கள் படுந் துன்பங்களுக்கு ஓர் அளவே இல்லை. ஆதலாற், சைவமடங்களின் பொருள்களை இத்தகைய அறிஞர்க்கும், சைவசித்தாந்தக் கல்லூரி கட்கும், தமிழ்க் கல்லூரிகட்கும் மிகுதியாய்க் கொடுத்துப் பயன்படுத்தல் வேண்டும்.

இவ் இந்திய நாட்டில் அரசினை நடத்துதற்கு உதவியாய் நிற்பாரிற் பெரும்பாலார் ஆரிய முறையைத் தழுவிய பார்ப்பனராயும் அவர் சொல்வழி நடப்பவராயும் இருத்தலால், சைவ சமய வளர்ச்சிக்குந் தமிழ் வளர்ச்சிக்குந் தமிழ் உணர்ந்தார் செலவிற்கும் அரசினரிடமிருந்து உதவிபெறுதல் இயலாதாயிருக்கின்றது.

இதனை உணர்ந்தாவது தமிழ்நாட்டு மன்னர்களும் சிற்றரசர்களும் சைவசித்தாந்த உணர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தமது பொருளைச் செலவுசெய்தல் வேண்டும். ஆங்கில அரசினாற் போற்றி வளர்க்கப் பட்ட ஆங்கில மாழிப் பயிற்சிக்கே இவர்கள் தம் பொருளைச் செலவுசெய்தல் சிறிதும் பயன்தராததாகும்.

இனிச், சைவ அவைகளும் தமிழ்க் கழகங்களும் வைத்து நடத்துவோர், தம்முடைய கழகக் கொண்டாட்டங்களுக்குச் சைவமும் தமிழும் நன்குணர்ந்த அறிஞர்களையே வருவித்து அவற்றை நடத்துதல்வேண்டும். வெறும் பட்டங்கள் வாங்கினவர்களையும் ஆங்கிலம் மட்டும் உணர்ந்தாரையும் வருவித்து ஆரவாரம் சய்தல் பயன்படாது. தமிழ் அறிஞர்களை வருவிப்போர் அவர்கட்குத் தக்கபடி பொருளுதவி செய்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/130&oldid=1585722" இலிருந்து மீள்விக்கப்பட்டது