உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை

125

சிற்றுயிர்களுங்கூடப் பசியெடுத்தபோது தமக்கு எளிதிலே கிடைக்கும் புல் இலை தழை கிழங்கு கனி தேன் முதலான இரைகளைத் தேடித் தின்றும், மலையருவி ஆறு ஏரி குளங் கூவல் முதலியவற்றின் நீரைப் பருகியும் பசி தீர்ந்தபின் செடிகளின் நடுவிலோ மலைப் பிளவுகளின் இடையிலோ கிடந்து கவலையின்றி உறங்கிக் காலங்கழிக்கின்றன.

யில்

மக்களுக்காவது உடுக்க ஆடை வேண்டும்; இச்சிற்றுயிர் களுக்கோ ஆடை ஆடையும் வேண்டுவதில்லை; மழை நனையாமலும் பனியிற் குளிராமலும் வெயிலில் வெதும்பா மலும் அவ்வுயிர்களைப் பாதுகாக்கத் தடிப்பான தோலோடு அடர்த்தியான மயிரையுங் கம்பளிப் போர்வைபோல் அவைகளுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். வெப்பம் மிகுந்த நமது தமிழ்நாட்டில் உள்ள ஆடு மாடுகளுக்குக் கு ளிரின் துன்பம் மிகுதியாய் இல்லாமையால், அவை களின் உடம்பின் மேல் அடர்ந்து நீண்ட மயிர்கள் இல்லை. ஆனால், வடக்கே இமயமலையிலும், அம்மலைச் சாரலில் உள்ள இடங்களிலும் போய்ப் பார்த்தால், அங்குள்ள ஆடு மாடுகளுக்கு அடர்ந்து நீண்ட மயிர்கள் இருத்தலைக் காணலாம். ஏனென்றால், அம்மலை நாடுகளில் தாங்க முடியாத பனியுங் குளிரும் மிகுந்திருக்கின்றன; அவ்வளவு பனியிலும் குளிரிலும் அவ்விலங்குகள் வெற்றுடம்பு உள்ளனவாயிருந்தால் அவை உடனே விரைத்து மாண்டு போகும்; ஆதலால் அவ்வாடு மாடுகள் அங்குள்ள பனி யிலுங் குளிரிலும் மாண்டு போகாமல் அவற்றைப் பாது காப்பதற்காகவே எல்லா எல்லா இரக்கமும் உள்ள கடவுள் அவைகளின் உடம்பின் மேல் நீண்டு அடர்ந்த மயிரை வளரச் செய்திருக்கிறான். ஆகவே, உணவின் பொருட்டும், உடையின் பொருட்டும், இருப்பிடத்தின் பொருட்டும் மக்களாகிய நாம் ஓயாமல் அடையுங் கவலையுந் துன்பமும் நம்மிற்றாழ்ந்த சிற்றுயிர்களுக்குச் சிறிதும் வேண்டும்போது இரை தேடித் தின்றும் உறக்கம் வந்தபோது உறங்கியும் ஆணும் பெண்ணுமாய்க் கூடியிருந்து தம் இனங் களைப்பெருக்கியும் அவைகள் கவலையின்றிக் காலங் கழிக்கின்றன. இப்படிப் பட்ட சிற்றுயிர்களின் வாழ்க்கை

ல்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/158&oldid=1585750" இலிருந்து மீள்விக்கப்பட்டது