உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 19

யையும், உணவுக்கும் உடுப்புக்கும் இருப்பிடத்திற்கும் அல்லும் பகலுமாய்ப் பாடுபட்டு மனைவியாற் கணவனும், கணவனால் மனைவியும் பெற்றோராற் பிள்ளைகளும், பிள்ளைகளாற் பெற்றோரும், ஒரு குடும்பத்தாரால் அவர்களின் சுற்றத்தாரும், ஒரு சுற்றத்தாரால் அவர்களின் குடும்பத்தாரும், ஓர் ஊராரால் அவர் தம் அரசரும், ஓர்அரசரால் அவர் தம் ஊராரும் ஆக எல்லாருமாய் ப் பலவகைத் துன்பங்களுக்கு ஆளாகி நோயிலுங் கவலை யிலும் இடையறாது உழன்று வருந்திவரும் மக்களாகிய நமது வாழ்க்கையையும் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நமது துன்ப

வாழ்க்கையை விட சிற்றுயிர்களின் ன்ப வாழ் க் கை

கு

எத்தனையோ மடங்கு சிறந்ததாய்க் காணப்படுகின்ற தன்றோ? தம்மைப் படைத்த உண்மையான கட வுளை நினையாமல் நம் போன்ற மக்களைத் தெய்வமாக வணங்கியும், தம்மையே தாம் பெரியராக நினைந்தும், வாழ்நாள் முதிரா முன்னரே கவலையாலும் நோயாலுங் கூற்றுவன் வாய்ப்பட்டு மடியும் நம் மக்கட் பிறவியைவிட இறைவன் பாதுகாப்பில் அடங்கிக் கவலையின்றி உயிர் வாழும் விலங்கினங்களின் வாழ்க்கை சிறந்ததாயிருக் கின்ற தன்றோ? அங்ஙனம் இருக்க, உண்ணல், உடுத்தல், உறங்கல், இன்புறுதல் என்னும் இவைகளினாலேயே மக்கள் வாழ்க்கையானது சிறந்ததா யிருக்கின்றதென்று நினைப்போ மாயின் அஃது எவ்வளவு பேதைமையாகக் காணப்படு கின்றது1

அப்படியானால் எல்லாப் பிறவிகளையும் விட மக்கட் பிறவியே சிறந்ததென்று அறிவுடையோர்களும் அவர் செய்து வைத்த நூல்களும் சொல்வது ஏன்? என்றால், எந்த வகையில் மக்கட் பிறவியானது மற்றைச் சிற்றுயிர்களின் பிறவியைவிட அங்ஙனஞ் சிறந்தது என்பதை நாம் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தெளிதல் வேண்டும், மக்களாகிய நாம் பகுத்தறிவு உடையவர்களாய் இருக்க மற்றச் சிற்றுயிர்களோ அத்தகைய பகுத்துணர்வு உடையனவாய்க் காணப்பட வில்லை. அதனாலேதான் நமது பிறவி மற்ற விலங்கின் பிறப்பைவிடச் சிறந்ததாகுமென்று அறிகின்றோம். விலங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/159&oldid=1585751" இலிருந்து மீள்விக்கப்பட்டது