உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரைமணிக்கோவை

127

களுக்கு இது நல்லது, இது தீயது என்று பகுத்துணர்தல் யலாது. அவை வழக்கமாய்த் தின்னுந் தீனியையே உட் காள்ளும்; பெரும்புதர்களிலும் மலைக் குகைகளிலும் மரநிழல்களிலுங் கிடந்தபடியே நாளைக் கழிக்கும்; இவற்றிற்குமேல் அவைகள் ஒன்றையும் அறியமாட்டா. மேன்மேல் இன்பத்தைப் பெருக்கும் வழிவகைகளும் அவை தெரிந்து கொள்ளல் முடியாது. பிற உயிர்களுக்கு நன்மை யாவது இது, தீமையாவது இது என்றும் அவை அறிவ தில்லை. இந்த உலகத்தில் நாம் ஏன் படைக்கப்பட்டிருக் கின்றோம்? இந்த உடம்பு ஏன் நிலையாய் இருப்பதில்லை? சிறிது காலத்தில் இந்த உடம்பின் உறவால் வந்த பெற்றோரும், மனைவிமக்களும், உடன் பிறந்தாரும், நேசரும், சுற்றத்தாரும் சூழ்ந்து கொண்டிருக்கவும், இந்த உயிர் திடீ ரென்று இவர்கள் எல்லாரையும் விட்டு எங்கே போகின்றது? அப்படிப் போகும் உயிரை இவர்கள் ஒருவருந் தடுக்க மாட்டாதவர்களாய் அலறி வீழ்ந்து அழுவது ஏன்? எவராலுந் தடுக்க முடியாத இந்தப் பிறப்பு இறப்புகளை வகுத்தவன் யார்? இவற்றை வகுத்தவனது நோக்கம் யாது? பெருந்துன்பத்திற்கு இ L டமான இப்பிறப்பு இறப்புகளை நீக்கும் வழி யாது? என்று இங்ஙனமெல்லாம் ஆராய்ந்து பார்க்கக் கூடிய உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியால் அடையத் தக்க பெரும் பயனும் விலங்குகளுக்குச் சிறிதும் இல்லை.

மக்களாகிய நாமோ இவைகளை யெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அவ்வாராய்ச்சியால் வரும் பயனை அடையத்தக்க உயர்ந்த நிலையில் இருக்கின்றோம். கிடைத்தற்கு அரிய அவ்வுயர்ந்த நிலையில் இருந்தும், அவ்வுண்மைகளை ஆராய்ந்து பாராமல், விலங்குகளைப் போல உண்பதிலும் உறங்குவதிலுங் காலங் கழித்து, வகை வகையான உடை களை உடுப்பதும், பளபளப்பான நகைகளைப் பூண்பதும், மினுமினுப்பான வண்டிகளிற் செல்வதும், நாளுக்கு நாள் வரும் புதுமைகளைக் காண்பதும், மேலுக்கு மேல் எழும் பாட்டுகளைக் கேட்பதும், ஒன்றுக்குமேல் ஒன்று உயர்ந்த மணப் பண்டங்களை மோப்பதும் கற்கக்கற்க இனிக்குங் கதைகளைக் கற்பதும் ஆகிய இவைகளே மக்கட் பிறவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/160&oldid=1585752" இலிருந்து மீள்விக்கப்பட்டது