உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

உரைமணிக்கோவை

.

131

இவைகளே யன்றி, அக்காலத்தில் இன்னும் ஒரு பேர் இடர் இருந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் மிகவும் எட்டியிருந்த ஊர்களில் மழை பெய்ய வேண்டுங் காலத்திற் செவ்வையாக மழை பெய்யாமல் பெய்யாமல் மறுத்து விட்டால், அவ்வூர்களின் விளை பொருள்கள் விளைவு குறைந்து பஞ்சத்தை உண்டாக்கின. விளைந்த ஊர்களுக்கு விரைவிற் கொண்டுபோய்ச்சேர்ப்பிக்க எளிதான வழி அக்காலத்தில் இல்லை. அதனாற் பஞ்சம் நேரிட்ட ஊர் களிலிருந்த குடிமக்கள் அங்கங்கு இருந்த இருந்தபடியே கணக்கின்றி மாய்ந்தனர். ஆனால், இக்காலத்திலோ முற் கூறிய துன்பங்களெல்லாம் ஒழிந்தன. எதனாலென்றாற், பகுத்துணர்ச்சியிற் சிறந்த ஜேம்ஸ் வாட் என்னும் ஒரு துரைமகன் நீராவியின் வல்லமையைக் கண்டுபிடிக்க, அவ னுக்குப் பின்வந்த ஆங்கில அறிஞர் பலர் அந் நீராவியைக் கொண்டு வண்டிகளையுங் கப்பல்களையும், இடர் நேராமல் மிகு விரைவாக ஓட்டத்தக்க முறைகளைத் தெரிந்து காண் தனாலேயாகும். ஆறு திங்கள் அல்லது ஓர் ஆண்டு மாட்டு வண்டியிற் சென்று சேரவேண்டும். ஊர்களை இப்போது நீராவி வண்டியில் ஏறி நாலைந்து நாட்களிற் போய்ச் சேர்கின்றோம். முன்னே ஐந்நூறு ரூபா, ஆயிர ரூபா செலவழித்துக் கொண்டுபோய்ச் சேர வேண்டிய இடங் களை, இப்போது நாற்பது ஐம்பது ரூபாச் செலவோடு போய்ச் சேர்கின்றோம். முன்னே வழியின்இடக்காலும், கொடிய விலங்குகளாலும், தீயவர்களாலும் நேர்ந்த இடுக்கண்களெல்லாம் இப்போது இல்லையாயின. பெருங் கடல்களைத் தாண்டிச் செல்லவேண்டிய ய நாடுகளை யெல்லாம் நீராவிக் கப்பல்களின் வழியாய்க் குறித்த காலத்திற் சுருங்கிய செலவில் இனிதாய்ப் போய்ச்சேர் கின்றோம். அந்நாடுகளிலுள்ள அரும் பண்டங்களை யெல்லாம் நாமிருக்கும் நாடுகளுக்கும், நம் நாட்டிலுள்ள ளை பொருள்களை அந்நாடுகளுக்குமாக ஏற்றுமதி இ ற றக்கும குமதி செய்து, குறைந்த வி விலைக்கு அவைகளைக் காண்டுங் கொடுத்தும் வருகின்றோம். பிற நாடுகளிற் புதியன புதியனவாக ஆக்கப்பட்டுவரும் நேர்த்தியான அரும்பண்டங்களைச் செல்வர்களே யன்றி, ஏழைமக்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/164&oldid=1585756" இலிருந்து மீள்விக்கப்பட்டது