உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 19

'ஷேக்ஸ்பியர்’ எழுதிய நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இவ்வுண்மை நன்கு விளங்கும். ஆங்கில மொழி அத் தகையதாயிருக்க, அதனொடு தமிழை ஒப்பிட வந்த அவர்கள், தமிழின் வரலாறும், அதன் வழக்கும் எவ்வளவு ஆராய்ந் திருக்கின்றார்களென்பது. அவர்கள் சொற்களிலிருந்து விளங்கவில்லை. ஆனாலும், எமக்குத் தெரிந்த மட்டில் எழுதுகிறேன்.

தமிழின் வரலாற்றையும், வழக்கையும் விரிவாகத் தெரிய வேண்டினால், யாம் நீண்டகாலமாக ஆராய்ந்து எழுதி யிருக்கும் நூல்களைப் பார்க்கும்படி வேண்டுகின்றேம். தமிழானது மிகுந்த சொல் வளமுடையது. தமிழையும், பிறமொழிகளையும் நடுவு நின்று நன்கு ஆராய்ந்த கால்டுவெல்" முதலான மேனாட்டாசிரியர்கள், தமிழானது பிறமொழிகளின் உதவியைச் சிறிதும் வேண்டாமல் எல்லாத் துறைகளிலும் தனித்தியங்க வல்லது என்றும், ஆங்கிலம் முதலான மற்ற மொழிகளோ பிற மொழிகளின் உதவியை வேண்டாமல் தனித்தியங்க மாட்டாதனவென்றும், தமிழானது பிறமொழிக் கலப்பின்றித் தூயதாக எழுதப்படும்போதும், பேசப்படும்போதும் மிக்க அழகுடையதாய்ப் பிறருள்ளத்தைக் கவருந்தன்மையதாய் விளங்குகின்ற தென்றும் வலியுறுத்திச் சொல்லிய அவ்

வு

99

சால்லியிருக்கின்றார்கள். அவர்கள் ண்மை எல்லாப் பொருள்களையும் தனித்தமிழில் எடுத்துரைக்குந் "திருக்குறள் என்னும் ஒரு நூலைப் பார்த்தாலும், நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதுவும் போதாதேல், திருக்குறளின் காலத்தும் அதற்கு முற்பட்ட காலத்தும், இயற்றப்பட்ட பழைய செந்தமிழ் நூல்களைப் பார்த்தால் தமிழின் சொல்வளம், பொருள்வளம் நன்கு விளங்கும். இவ்வளவு சிறந்த தமிழ் மொழியைப் பேசிய பழைய தமிழ் மக்கள் எவ்வளவு சிறந்த நாகரிகம் வாய்ந்த வர்களாயும், பிற மொழியாளர்களுக்கும். அவர்களுடைய சொற்களுக்கும் அடிமைப்படாத எவ்வளவு தனிப்பெருஞ் சிறப்பு உடையவர்களாயும் இருந்திருக்க வேண்டும்! இத் தகைய தமிழரையும் இத்தகைய தமிழ் மொழியையும், ஆ ங்கில மொழிக்கும், ஆங்கில மக்களுக்கும் ஒப்பிடுவது எவ்வளவு பொருந்தாததா யிருக்கின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/199&oldid=1585798" இலிருந்து மீள்விக்கப்பட்டது