உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

261

னாடு முதலிய அவயவ வுருவங்களால் பருப்பொருளாகக் காணப்படும் இக்காரிய உலகத்தைத் தத்தம் நுண்ணிய முதற் காரணமாகிய மிகச்சிறிய அணுவடிவங்களாகவும், அதிநுட்ப முதற்காரணமாகிய *மாயையாகவுந் திரித்தருளுகின்ற இறைவன் றிருவருண் முயற்சியே அங்ஙனம் அழிக்குங்காரியமென்று ஓதப்பட்டதல்லது உள்பொருளாக்குவதே அதுவாம் என்ப தன்று. இங்ஙனங் காரிய ரூபமாகக் காணப்படும் உலகம் காரணரூபமாய் ஒடுங்குதல் பற்றியே அறிவுடையோர் அதனை நிலையற்றதென்று ஓதுவர்.

இதனை ஓரெடுத்துக்காட்டு முகத்தானும் விளக்குவாம். குயவன் தன் மதிநுட்பத்தால் மண்ணைத்திரட்டிக் குழித்து வாய் குறுக்கி வயிறு பெருக்கிச் சுள்ளையிலிட்டுச் செவ் வண்ணமாக்கி எமக்கு ஒரு குடந் தந்தான், தர, அதனை யாம் நெடுநாள் பயன்படுத்தி வருகையில் அதுவுஞ் சிறிது சிறிதாகத் தேய்வுண்டு கடைசியிற் குடமென்பதொன்று இல்லையாக முடிந்தது. பொன் அணிகலன் செய்தல் வல்லானொருவன் யாம் தந்த பத்துக் கழஞ்சு பொன்னையுஞ் செவ்விய ஓரணி கலமாக அமைத்து எம் புதல்விக்கு பூட்டினான். அவ் வணிகலத்தைச் சில ஆண்டு கழித்துக் கழற்றி நிறுத்துப் பார்த்தபோது அஃது எட்டுக் கழஞ்சுதான் நின்றது. பின்னுஞ் சில ஆண்டு கழித்து நிறுத்தபோது ஐந்து கழஞ்சுதான் நின்றது. பின்னும் இவ்வாறே நிறுத்து நிறுத்துப் பார்க்கக் குறைந்து கொண்ே போய்க் கடை சியில் அணிகல மென்பதே ஒன்று இன்றாய் முடிந்தது. இனி இங்ஙனங் காட்டிய குடமும் அணிகலமும் இல்லையாய்ப் போன மாயந்தான் என்னை என்று ஒரு சிறுவனைக் கேட்பினும் அவன் தினைத்தினையாகத் தேய்ந்து இறுதியில் அவை யில்லையாயின வென்று மறுமொழி யுரைப்பான். இனித் தேய்தல் என்பதுதான் யாது என்று நுணுகியாராய்ந்து அவனைக் கேட்பினும் அச்சிறுவன் குடமாகவும் அணி கலமாகவும் திரண்டெழுந்த மண்ணும் பொன்னும் துகள் துகளாகப் பிரிந்துபோயினவென்று அறிவுதோன்றக்கூறு வான். இனி அத்துகள்கள் தாம் எங்குச் சென்றினவென வினவின் அவன், அவை எங்குஞ் சென்றில் நுட்பவடிவமாக இங்கேதான் இருக்கின்றன என்றும் மொழிந்து எம்மை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/294&oldid=1585906" இலிருந்து மீள்விக்கப்பட்டது