உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைமணிக்கோவை :

275

சமயிகளுந் தத்தஞ் சமயநூல் ஆணைவரம்பு கடவாது அவ்வச் சமயவிதி வழி யொழுகி அதனால் அறிவு முதிர்ச்சி யடைந்து மேன்மேற் சமயங்களிற் பிறந்து சித்தாந்தமாக நிலைபெறும் முடிநிலைச் சமயமொன்றால் நேரே சிவ பிரான் றிருவடிப் பேரின்ப வீடுபேறு பெறற்பாலார். இங்ஙனமின்றித் தஞ்சமய வரம்பு அழித்து அன்பிலராய் எல்லாம் ஒன்றுதான் எனக் கூறுதல் மக்கட் பிறவி பேறு இழப்பதொன்றாய் முடியும்.

அஃது யாங்ஙனமோவெனின்; பொருள் வேண்டி ஆடவர் பலர்தோள் முயங்கிக் கழிந்த பொதுமகள் அவ் வாடவர் யாவரிடத்தும் அன்பிலளாம்; அன்பிலளாகவே இன்பநுகர்ச்சியும் அவட்கின்றாம். இனித் தானின்பந்

அவள் தனக்கு இயைந்

துய்த்தல் குறித்தாளாயின் தானோர் ஆடவனை ஏனை ஆ ஏனை ஆடவரிற் சிறப்பக் கொண்டு அவன்மாட்டுக் கழிபெருங்காதலுடையளாய் இன்பந் துய்ப்பாளாவது. இன்னும் முத்துப் பவளம் நீலம் பச்சை கோமேதகம் புட்பராகம் வைடூரியம் மரகதம் மாணிக்கம் முதலிய நவமணிகளையும் ஆராய்ச்சி செய்தலுறுவான் அத்தொகுதிக்கண் நல்லதொன்று கண்ட வழி அதனை ஏனையவற்றினுஞ் சிறந்தெடுத்து அதன்கண் கழிபெருங் காதலுடையனாய் அதனைப் பொதிந்து வைத்துப் போற்றக் காண்கின்றோம். அங்ஙனமவற்றைப் பகுத்துக்காணும் அறிவின் மதுகையில் வழி அவற்றை ஒன்றுகூட்டி அவற்றின் கண் ஆசையிலானாய் ஒழுகுதலுங் காண்கிறோம். இருந்தவாற்றால் அன்பென்னும் உள்ள நெகிழ்ச்சியுண்ட தற்குப் பொது நோக்குக் கழித்துச் சிறப்பறிவு நோக்குக் காளல் வேண்டுவது ஒருதலையாம். ஆகவே, சைவர் களாகிய நன்மக்கள் ஏனைச்சமயத் தய்வங்களைக் கனவினும் நினைதற்கு ஒருப்படாராய்த் தன்கொழுநனி டத்துக் கழிபெருங் காதலுடையளாய் யளாய் இன்பந்துய்க்கும் மனைக்கிழத்திபோற் சிவபெருமானிடத்து அன்பு நிகழப் பெற்று வழிபாடுசெய்து உய்தல் வேண்டுமென்பது ஈண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/308&oldid=1585920" இலிருந்து மீள்விக்கப்பட்டது