உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் 19

ரறிவுப்பொருள் வேண்டப்படுதல் எற்றுக்கு எனச் சாங்கிய மதத்தார் கூறுபவாலோ வெனின்; அவர் கூற்றும் அடாது; ஏனென்றால், அறிவில்லாப் பொருளின் நிலைகளும், அவற்றின் எல்லை காணப்படாத பரப்புகளும், அப்பரப்பு களில் எல்லையில்லாமல் அடங்கிக் கிடக்கும் எண்ணிறந்த பொருள்களுஞ் சிற்றறிவு சிறுதொழில்களுடைய சிற்றுயிர் களால் எங்ஙனமியக்கப்படக்கூடும்? இந்த நிலவுலகத்தின் ஒரு சிறிய விடத்திலிருக்கும் ஒருவன் சில காலிருந்து சிலகாலத்தின் மாய்ந்து போகின்றவனாயுந், தான் உயிரோடிருக்குங் காலத்திலும் பலவகை நோய்களாற் பற்றப்பட்டு அந்நோய் தீர்த்தற்குப் பலவகை மருந்துகளாகிய பருப்பொருளுதவியை வேண்டி நிற்பவனாயுந், தான் உயிர் பிழைத்து வாழ்தற்கு அரிசி பருப்பு பால் நெய் முதலான பருப்பொருட் பண்டங் களினுதவியை இன்றியமையாது வேண்டி நிற்பவனாயுந், தன் கண்ணெதிரே அருகிலிருக்கும் இடங்களையும் பொருள் களையுமன்றித் தன் கட்பார்வைக்குப் புறத்தே அருகிலிருக்கும் பொருள்களையும் தன் கட்பார்வைக் கெட்டாத் தொலை விலுள்ள பொருள்களையுங் காண மாட்டாதவனாயும், நேரே அருகில் உள்ள பொருள் களுள்ளும் மிகச் சிறியனவா யிருப்பனவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாதவனாயும், மிகப் பெரியன வாயிருக்குஞ் சுமைகளையும் பொருள் களையும் பிறருடைய பிறகருவி களினுடைய உதவியின்றி அசைக்க ம மாட்டாதவனாயும் இருத்தலின், இவனது அறிவிற்கும் இவனது ஆற்றலுக்கும் எட்டாத இந் நிலவுலக மாகிய பெரும் பருப்பொருளை இவன் றன்னறிவு கொண்டுந் தன் வலிமை கொண்டும் எங்ஙன மியக்கமாட்டுவான்? பருப்

ச்

பாருளாகிய இந்நிலவுலகஞ் சிறிது சிறிது அதிர்ந்தாலும், இதன்கண் உள்ள எரிமலைகள் வெடித்து நெருப்பைக் கக்கினாலும், இதன்கண்ணுள்ள ஆறுங் கடலும் வெள்ளம் பெருகினாலும், இதன்கண் உலவுங் காற்றுச் சூறாவளியாய்ச், சுழன்று அடித்தாலும் மக்களாகிய சிற்றுயிர்களும் இச் சிற்றுயிர்களா லமைக்கப்படும் நாடு நகரங்கள் மாடமாளிகை களும் பொடிப்பொடியாய் நுறுங்கிச் சாம்பலாய் வெந்து புழுதியாய்ப் பறந்து அழிந்துபோவதை எங்கண்ணெதிரே ஒரோவொரு காலங்களில் ஒரோவோர் டங்களிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/41&oldid=1585627" இலிருந்து மீள்விக்கப்பட்டது