உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் 19

மாட்டுவேம், இயக்கமாட்டுவேம், அழிக்கமாட்டுவேம் என்று எவரேனுங் கூற முன்வருவராயின், அவரை ‘மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தனென்' றெள்ளிச் சிறுமகாரும் நகையாடு வரன்றோ? ஆகவே, சிற்றறிவினரான உயிர்கள் தாமாகவே மாயையை இயக்கி, அதனிலிருந்து தம்முடம்பு களையும் உலகங்களையும் வ்வுலகத்துப் பல பண்டங் களையும் படைத்துக் கொள்ள மாட்டுவரென்னுஞ் சாங்கிய ருரை, பிறந்த குழவி தன் தாயினால் எடுத்து அணைக்கப் படாமல் தானாகவே பாலிருக்கு மிடந்தேடி அதனைப் பருகுமென்று கூறுவாருரையோ டொத்து நகையாடற்பால தாய் முடியும். ஆதலால், அறிவில் பொருள்கள் எல்லா வற்றிற்கும் முதற்காரணமாகிய மாயையை இயக்கி, அதன் கணிருந்து சிற்றுயிர்களெல்லாவற்றிற்கும் அவ்வவற்றின் இயற்கைக்கு இணங்கப் பலவேறு வகையான உடம்புகளையும், அவைகள் நுகருதற்குப் பல்வேறு வகையான பண்டங்களை யும், அவைகள் இருந்து உயிர் வாழ்தற்குப் பல்வேறு வகை யான உலகங்களையும் முன்னறிந்து அமைத்து வைத்தற்கு, எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இரக்கமும் ஒருங்குடையனாகிய ஒரு முழுமுதற் கடவுள் இன்றி இன்றியமையாது வேண்டப்படுவ னன்பது தெளிந்த முடிபா மென்றுணர்ந்து கொண்மின்கள்! ஆனது பற்றியே, இராமலிங்க அடிகளார் “எப்பொருட்கும் எவ் வுயிர்க்கும் இறைவனாகிய சிவபிரான் உண்டென்பதனை மேலைத் திருப்பாட்டில் நன்கெடுத்து அறிவுறுத்தருளினார்.

இனி, அப் பெற்றியனான இறைவன் பொருள்களி னுள்ளும் புறம்பும் இருப்பனென்று கூறியதென்னை? இவ்விரண்டன் புறத்தே உருவுடையனாய் இருந்தே இவை தம்மை இயக்க மாட்டுவான் என்று துவிதவாதிகள் கூறுதல் போலாவது, அற்றன்று இறைவன் பொருள்களிலும் உயிர் களிலும் அருவாய் அவற்றின் அகத்தே மட்டும் இருப்பா னல்லது புறத்தே இருப்பானல்லனென அருவவாதிகள் கூறு முரைபோலாவது நுவலாமல், அவை இரண்ட னகத்தும்

புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச் சய்த

தென்னையெனிற் கூறு முரை போலாவது நுவலாமல், அவை இரண்டனகத்தும் புறத்தும் இருப்பனென

அடிகளார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/43&oldid=1585629" இலிருந்து மீள்விக்கப்பட்டது