உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

அறிவுரைக்கோவை

15

ங்கள்

வென்றுந் தெரிந்து கொள்கின்றோமாதலால், நாமுஞ் சிறு குழவிகளாய் இருந்த ஞான்று ஏனைக் குழவிகளைப் போலவே நம்மை இன்னாரென்றும், நம்மைச் சூழ்ந்தவர் இன்னா ரென்றும், நம்மைச் சுற்றியுள்ள பண் இன்னவை யென்றும் உணரமாட்டாதவர்களாயிருந்தோம் என்பதை ஐயமறத் தெளிந்து கொள்கின்றோம். இதுமட்டுமா, நாம் ஆண்டில் முதிர்ந்தவர்களாய்க் கல்விப் பயிற்சியாற், பேரறிஞர் சேர்க்கையால் அறிவு விளங்கப்பெற்ற பின்னும், நமதறிவு ஒரு தன்மைத்தாய் விளங்குவதின்றிப் பல்வேறு மாறுதல்களின் வயப்பட்டு, நம்மை டையிடையே துன்புறுத்தி வரக் காண்கின்றேம் அல்லேமோ? நேற்று அறிந்தவைகளிற், சென்ற கிழமையில் அறிந்தவைகளிற், போன திங்களில் அறிந்தவைகளிற், கடந்த ஆண்டு அறிந்தவைகளில் எத்தனைகோடி நினைவுகள் எத்தனை கோடி எண்ணங்கள் நம்மறிவுக்குத் தென்படாமலே மறைந்து போயின! முன்னறிந்தவைகளை இங்ஙனம் நாம் மறந்து மறந்து போதலால் நமக்குவரும் இடர்களுக்கு, நம்மாற் பிறர்க்குவரும் இடர்களுக்கு ஒரு கணக்குண்டோ! முன்னறிந்தவைகளை மறத்தலால், நிகழ்ந்த வைகளை நிகழ்ந்தபடியே சொல்ல மாட்டாதவர்களாய்ப், பார்த்த பொருள் கேட்டபொருள் சுவைத்தபொருள் இயல்புகளை அப்பார்த்த கேட்ட சுவைத்தபடியே நினைவுகூர்ந்து சொல்ல மாட்டாதவர் களாய்ப் பொய்த்துப் பிழைபடுகின்றனம் அல்லமோ?

கடந்தவற்றை யறியும் அறிவிற்றான் இத்தகைய மாறுதல்கள் நிகழ்கின்றன வென்றாலும், இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வனவற்றிலாவது நமதறிவு பொய்படுத லின்றி மெய்யாக அறிதல் செய்கின்றதா? அதுவும் இல்லையே! நாம் நேரே காண்கின்ற பொருளையும் ஆராய்ந்து பார்த்தா லன்றி ஐயமறத் தெளியமாட்டாத வர்களாய் இருக்கின்றோம். ஒரு துண்டு செம்பையும் ஒரு துண்டு பொன்னையும் பளிச்சென்று தோன்ற விளக்கிக் கையிற் கொடுத்தல், அவையிரண்டற்குமுள்ள வேறுபாடு தரியாமல் எத்தனை பேர் 6 ஏமாந்து போகின்றனர். தித்திப்பான நாரத்தம் பழங்கொடி முந்திரிப்பழம் முதலியன வாங்குபவரில் எத்தனை பேர் அவற்றை நன்கு ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/48&oldid=1585634" இலிருந்து மீள்விக்கப்பட்டது