உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் 19

இவ்விரண்டு இலக்கணங்களும் மாயை ஆணவங்களுக்கும், மாயை ஆணவங் களினின்று விடுபட்ட உயிர்களுக்கும் முறையே பொருந்துவான் செல்லும். என்னை? உடம்பாயும் உடம்பின் கருவிகளாயும் உலகங்களாயும் உலகத்துப் பாருள்களாயுந் திரிபுறாத மாயையின் பகுதி சிறிதாயும், அங்ஙனந் திரியாத பகுதி பெரிதாயும் உளவென்பது ஆராய்ச்சியால் நன்கு புலனாதலின், திரிபில்லாத அதன் முதற்காரணப் பகுதி இயற்கை யுண்மைநிலை யுடையதாதல் தானே பெறப்படுமன்றோ? இங்ஙனமே, பிறவிக்கு வராத உயிர்களும் இன்னும் எத்தனையோ கோடிக்கணக்காய் உள்ளனவாகலின் அவைதம்மைப் பற்றியிருக்கும் ஆணவ மலமுங் காரியப்படாததாய் இயற்கை யுண்மைநிலை வாய்ந்த தாதலுந் தானே பெறப்படுமன்றோ? இவைபோலவே, சதாசிவதத்துவத்தில் வைகுஞ் சதாசிவர் முதலாயினர் இயற்கையிலேயே ஆணவமலப் பற்றுப் பெரிதும் அகன்ற வராய் இயல்பாகவே பேரறிவு விளக்கம் வாய்ந்தவராய் இருத்தலின், அன்னார்க்குள்ள அவ்வறிவு இயற்கையே யுண்மைநிலை யுடையதாதலுந் தானே பெறப்படும்; பெறப் படவே, இறைவன் ஒருவனே இயற்கை யுண்மை யினனாயும் இயற்கையறிவினனாயும் விளங்குவ னென்ற சொற் குற் றமுடைத்தாய் முடியுமாம் பிறவெனின்; அற்றன்று, அக்குற்றம் அணுகாமைப் பொருட்டே "இயல் உண்மையறிவு” என்ற வளவில் அமையாது, "இன்பம்" என்பதொன்று கூட்டி, “இயல் உண்மை அறிவு இன்பவடிவாகி” என்று ஓதி, வரம்பிலின்ப வடிவினனாய் நிற்றல் அவற்குச் சிறந்த இலக்கணமாதல் அடிகள் புலப்பட வைத்தார்.

றவன்

அஃதொக்குமா றென்னை? மாயையிற் றிரண்ட பண்டங்களிற் பல இன்சுவையினவாயும், வேறுபல நறுமணத் தினவாயும், மற்றும் பல இன்னோசையினவாயும், இன்னும் பல அழகிய தோற்றத்தினவாயும், பின்னும் பல இனிய மென்மையினவாயும் புகுந்து உயிர்கள்பால் இன்பத்தை விளைக்கக் காண்டலின், மாயையும் இன்பமுடைத் தென்பது போதருமாலோவெனின்; அஃதொவ்வாது; என்னை? மாயையிற் றிரண்ட பண்டங்கள் அறிவுடைய உயிர்கள்மாட்டு இன்ப துன்பங்களை விளைவித்தற்குக் கருவியாமல்லது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/55&oldid=1585641" இலிருந்து மீள்விக்கப்பட்டது