உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

23

அவைதாமே இன்ப துன்பங்கள் உடையவல்லாகலின், மாயை அறிவில் பொருளாதல் கண்கூடாக அறியக் கிடத்தலின், அது தானே தனக்கு இன்பமுண்டென்றாதல் துன்ப முண்டென்றாதல் அறிதல் செய்யாது. கனிந்த பலாச்சுளையைத் தேனொடு கூட்டி யுண்டவனுக்கு, அதன் இன்சுவையினால் இன்பம் மீதூரக் காண்டுமேயன்றி, அப்பலாச்சுளையே அவ்வின்சுவை இன்பத்தை எய்தக் காண்டுமில்லையே. ஒரு கூர்ங்கத் தியாற் கையறுப்புண்டவனுக்கு, அதனால் துன்பம் மீதூரக் காண்டுமே யன்றி, அக்கத்தியே அவன் கையை அறுத்து அதனால் துன்புறக் காண்டுமில்லையே.இவ்வாறே இன்ப துன்ப நிகழ்ச்சிகள் அறிவுடைய வுயிர்கள் பாலன்றி, அவை தம்மை அவற்றின்பால் விளைவிக்கும் மாயையின், காரியங்களில் ஒரு சிறிதும் காண்கிலமாதலின் மாயை அவற்றிற்குக் கருவியேயா மல்லால், அவை தாமே இன்ப துன்பங்கள் உடையவாகா என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மையேயாம்.

அஃதொக்குமாயினும், அறிவுடைய உயிர்கள் இன்பம் எய்தக் காண்டலின், அவையும் இன்பமுடைத் தென்பது பெறப்படும்; படவே, இறைவன் ஒருவனே இன்பமுடையன் என்று உரைத்தது இழுக்காமாலோ வெனின்; இழுக்காது; என்னை? உயிர்களெல்லாம் மாயையிற் றிரண்ட பண்டங்களை நுகர்தலானும், அழகு அறிவு அன்புடைய பிறவுயிர்களொடு சேர்தலானுமே இன்புறக்காண்டு மல்லது, அவ்விரண்டன் றொடர்பின்றித் தானே தனித்திருந்து ன்புறும் ஒரு சிற்றுயிரை யாண்டுங் காண்டிலமாகலின் என்பது, இங்ஙனம் பிறிதொன்று இன்புறுத்தினாலன்றி இன்புறல் அறியாத சிற்றுயிர்களை இயற்கை யின்பமுடை யன வன்றல் இசையாமையின், முழுமுதற் கடவுளொருவனே இயற்கை யின்ப முடையனென்பது முடிக்கப்படும்; படவே, அவற்குரிய அச்சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரிமை யாவான் சேறல் இல்லையென்று கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல்

வேண்டும்.

அதுவேயு மன்றிச், சிற்றுயிர்களெல்லாந் துன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் துன்புற்றும், இன்புறுத்தும் பொருட் சேர்க்கையால் இன்புற்றும் வருதல் போல், இறைவன் எதனாலேனுந் துன்புறுத்தப்படுதலும் பிறிதெதனாலேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/56&oldid=1585642" இலிருந்து மீள்விக்கப்பட்டது